வியாழன், மே 25, 2006

சொந்தங்களிடமான சொந்தம்




சொந்தங்கள் எரிச்சலைத் தருகின்றன

விசயம் கேட்கும் காதுகள்
கூர்ந்து நோக்கும் கண்கள்
எப்போது சிரிக்கலாம் என
நம் சருக்கலை எதிர்பார்த்து நிற்கும் குரோத மனம்

தான் மட்டுமே உயர்வு
மற்று எவர் செய்தாலும் சரியே இல்லை
எனப் பேசும் பொறமைக் குணம்

இவர்களை நம்பி
செய்யாமல் இருக்கவும் முடியாது
செய்தும் தொலைக்க முடியாது

என்ன செய்வது
இவர்களுடான பந்தம் பாதியில்
நின்றுவிடக் கூடாதே

சொல்லியும் சொல்லாமலும்
விசேஷத்தை முடித்துவிட்டோம்
இனி அவர்கள் விசேஷம் வரும்
அதுபோது நாம் வைத்துக் கொள்வோம்

1 கருத்து:

தேசாந்திரி சொன்னது…

நன்றாக இருக்கிறது.