சனி, செப்டம்பர் 15, 2012

முனைவர் பழ. முத்துவீரப்பன் அவர்களின் மணிவிழா மலர் தயாரிப்புப்பணி

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் தமிழியல் துறைத் தலைவர் மற்றும் மொழித்துறை புல முதன்மையர் முனைவர் பழ. முத்துவீரப்பன் அவர்களின் மணிவிழா விரைவில்நடைபெற உள்ளது. இதற்கான மலர் தயாராகி வருகின்றது. பேராசிரியரைப் பற்றி அறிந்த அன்பர்கள் அவர்களின் நினைவுகளை வழங்க அன்புடன் வேண்டுகின்றேன்


பேரன்புடையீர்,
வணக்கம். வாழிய நலனே!
வரலாற்றுச்சிறப்புமிக்க சிதம்பரம் அண்ணாமலைப்பல்கலைக்கழகத்தின் தமிழியல் துறைத் தலைவரும், இந்தியமொழிப்புலமுதன்மையரும் ஆகிய பேராசிரியர் பழ.முத்துவீரப்பன் அவர்களின் மணிவிழா, வரும் 2012 டிசம்பர்த்திங்கள் நான்காம் வாரத்தில் நிகழ உள்ளது
அது சமயம் அவரது சிறப்புகளைப் புலப்படுத்தும் வண்ணம் மணிவிழா மலர் ஒன்று வெளிக்கொணர விரும்புகிறோம். அதற்குத் தங்களின் மேலான,
வாழ்த்துரை/ வாழ்த்துக்கவிதை/ மணிவிழா நாயகரைக்குறித்த தங்களின் அனுபவ நினைவுக்குறிப்புகள் தாங்கிய கட்டுரை/ மற்றும் அவை தொடர்பான நிழற்படங்கள்/ தகவல்களை
கீழ்க்காணும் எமது தொடர்பு முகவரிக்கு அஞ்சலிலோ, இணைய முகவரிக்கோ அனுப்பி உதவ வேண்டுகிறோம்.

தங்களின் மேலான பங்களிப்பினை, வரும் 2012 அக்டோபர் 15 க்குள் அனுப்பியுதவுமாறு  வேண்டுகின்றோம். நன்றி
மிக்க அன்புடன்
(மலர்க்குழுவினர்க்காக)



தொடர்பு முகவரி:
கிருங்கை சேதுபதி
321,3ஆவது முதன்மைச்சாலை,மகாவீர் நகர், புதுச்சேரி-605008
இணையமுகவரி- sethukapilan@gmail.com.
பேச - 9443190440

கருத்துகள் இல்லை: