வியாழன், மார்ச் 03, 2011

தேரெழுந்தூர் கம்பன் விழா(மார்ச் ௧௨-௧௩ ) 2011 அழைப்பிதழ்




கம்பன் பிறந்த மண்ணான தேரெழுந்தூரில் கம்பர் கோட்டத்தில் மார்ச் 12 -13 ஆகிய நாள்களில் கம்பன் விழா நடை பெற உள்ளது. அனைவரும் வருகை தர வேண்டுகிறோம்.

12 ஆம் தேதி நிகழ்வுகள்

மாலை ஆறு மணிக்குத் தொடங்கவுள்ள இந்த விழாவில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் தமிழியில் துறைத் தலைவர், மற்றும் மொழிப் புல முதன்மையர் பொறுப்புகளை வகித்து வரும் திரு. பழ. முத்துவீரப்பன் அவர்கள் தலைமை ஏற்க உள்ளார்கள். திருமிகு த. அகர முதல்வன் அவர்கள் தொடக்க உரையாற்ற உள்ளார்கள். கம்பனில் இஸ்லாமியச் சிந்தனைகள் என்ற தலைப்பில் சிறப்புரையை திரு. மு. சாயபு மரைக்காயர் அவர்கள் வழங்க உள்ளார்கள்.
வரவேற்புரையை திரு. சீ சௌந்தரராஜன் அவர்கள் வழங்குகிறார். அறிமுகவுரையை கம்பன்அடிசூடி வழங்குகிறார். நன்றியுரைக்க திரு. மு. அ பசீர் அகமது அவர்கள் வருகிறார்கள்.

13 ஆம் தேதி நிகழ்வுகள் மாலை 6 மணி

பட்டி மண்டபம் இன்று நடைபெறுகிறது. திருமதி புனிதா ஏகாம்பரம் அவர்கள் நடுவராக விளங்க உள்ளார். பட்டி மண்டபத்தின் தலைப்பு வஞ்சனையில் விஞ்சியவர் யார் என்பதாகும். இதில் கூனியே என்ற தலைப்பில் திருவாளர்கள் சொ. சேதுபதி, சுமதிஸ்ரீ, மு. பழனியப்பன் ஆகியோரும், சூர்ப்பனகையே என்ற தலைப்பில் திருவாளர்கள் இரா. இராமசாமி, பாரதி பாபு, ம. சிதம்பரம் ஆகியோர் பங்கேற்று விவாதிக்க உள்ளனர்.

விழாவிற்கு அ. முத்துக்குமார் அவர்கள் வரவேற்புரையாற்றவும், திரு. மு. ஜானகிராமன் நன்றிஉரைக்கவும் உள்ளனர்.

கம்பன் சீர் பரவும் அனைவரும் வருகை தந்துச் சிறப்பிக்க வேண்டுகிறோம்.

தொடர்பி்ற்கு

04364-237573

காரைக்குடி
9445022137


தேரெழுந்தூருக்கு மயிலாடுதுறையில் இருந்துப் பேருந்துகள்செல்லுகின்றன.
கம்பன் பிறந்த இடத்தில் கம்பனைக் கேட்க வாருங்கள்.

கருத்துகள் இல்லை: