திங்கள், மார்ச் 22, 2010

காரைக்குடி கம்பன் கழக எழுபத்தியிரண்டாம் ஆண்டுவிழா

கம்பன் புகழ்பாடிக் கன்னித் தமிழ் வளர்க்கும் காரைக்குடி கம்பன் கழகத்தின் எழுபத்தியிரண்டாம் ஆண்டுவிழா வரும் மார்ச் மாதம் 27 ஆம் தேதி முதல் மார்ச் மாதம் 30 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. அன்பர்கள் அனைவரையும் வரவேற்கிறோம். கம்பன் மணிமண்டபம் நோக்கி அன்பர்கள் அனைவரையும் அழைக்கிறோம். நேரம் மாலை 5.30 மணி

27.3.2010

முதல்நாள் நிகழ்வில் கவிக்கோ அப்துல் ரகுமான் தலைமை ஏற்கிறார். தினமணி நாளிதழின் ஆசிரியர் கே. வைத்தியநாதன் அவர்கள் தொடக்கவுரை ஆற்றுகிறார். பழ. பழனியப்பன் நிறுவியுள்ள மீனாட்சி பழனியப்பா அறக்கட்டளை ஆய்வுச் சொற்பொழிவினை முனைவர் பழ. முத்தப்பன் கம்பனில் நான் மறை என்ற தலைப்பில் நிகழ்த்துகிறார். இதே தலைப்பிலான நூல் அன்றே வெளியிடப் படுகிறது. இதனை உமா பதிப்பகம் செளியிடுகிறார்கள்

மேலும் இந்நிகழ்வில் முனைவர் சொ. சேதுபதி எழுதிய வரலாறு நடந்த வழியில் என்ற நூலும் வெளியிடப்படுகிறது. மேலும் போட்டிகளில் வென்ற மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்படுகின்றன.


மேலும் பள்ளத்தூர் பழனியப்பன் அவர்கள் எழுதிய யுத்த காண்ட கம்பராமாயண உரை நூல்களும் வெளிவருகின்றன.


இத்தோடு அன்று மதுரைக் கம்பன் கழகத் துணைத்தலைவர் திரு சங்கர சீத்தாராமன் அவர்களும் பங்கேற்கிறார்கள். இவர்களுடன் புதுச்சேரி கம்பன்கழகத் துணைத்தலைவர் வி.பி. சிவக் கொழுந்து அவர்களும் பங்கேற்கிறார்கள்.

28.03.2010
இன்று திரு சோ. சத்தியசீலன் அவர்கள் தலைமையேற்கிறார்கள். தி. அருணாசலம் அவர்கள் எழுதிய உவமை சொல்வதில் உவமையில்லாக்கம்பன் என்ற நூலும், அ. அறிவு நம்பி எழுதிய செம்மொழி இலக்கியச் சிந்தனைகள் என்ற நூலும் வெளியிடப்படவுள்ளது.


இதில் திரு. தெ. ஞானசுந்தரம் அவர்கள் தீதும் நன்றும் என்ற தலைப்பில் உரையாற்றுகிறார்கள்.


மேலும் கவிச்சக்கரவர்த்தி கம்பன் வாழ்க்கை வரலாறு என்ற குறும்படம் திரையிடப்படவுள்ளது.


மேலும் இரவு மணி ஒன்பதிற்கு இராம நாடகம் என்ற தலைப்பில் திருமதி கௌசல்யா சிவக்குமாரின் இசைப் பேருரை நடைபெற உள்ளது.


29.03.2010
இன்று இளம்பிறை மணிமாறன் அவர்கள் தலைமையில் பட்டி மண்டபம் நடைபெற உள்ளது. மகளிர் பட்டி மண்டபம். தலைப்பு தரும நெறிநின்ற தம்பியரில் தலை நின்றவர் யார்? என்ற தலைப்பில் கும்பன் என்ற அணியில் ருக்மணி பன்னீர் செல்வம் அவர்களும் சித்ரா சுப்ரமணியம் அவர்களும், வீடணனே என்ற தலைப்பில் விசாலாட்சி சுப்பிரமணியம் அவர்களும் கவிதா ஜவகர் அவர்களும் பங்கேற்கிறார்கள்.


30.03.2010

இன்று நாட்டரசன் கோட்டையில் விழாநடை பெறுகிறது. இந்த விழாவில் அ. அறிவொளி அவர்கள் தலைமை ஏற்கிறார். இதில் கோ. சாரங்கபாணி, கண. சுந்தர் ஆகியோர் பேசுகின்றனர்.


இவ்வகையில் நடைபெறும் இனிய விழாவிற்கு அனைவரும் வருக.

கருத்துகள் இல்லை: