சனி, மே 17, 2025

சிலப்பதிகாரச் சிலம்பொலி

 காவிரிக் கடலில் கலக்கும் புகாரில்


தொடங்கிய காப்பியம் சிலப்பதி காரம்

கலைஞர் மனதில்  எழுத்தில்  திரையில்

விளைந்த  காப்பியம் சிலப்பதி காரம்

கடலில் தொலைந்து போன நகரை

மீண்டும் கொண்டு வந்த  அறிஞர்

எழுநிலை மாடம் எழுந்து நின்றது

எழுதிய காப்பியம்  கல்லில் சமைந்தது

சிலம்பே தமிழன் தனித்த சொத்து

இளங்கோ கைவிட்ட இடங்கள் கலைஞர்

கைபட்டு   பண்பாடு வளர்த்தது  உண்மை

கிரேக்க கிழவன்  ஆயிரத் தெட்டு

பொற்காசு  தந்திட  தயாராக இருக்க

தமிழன் கோவலன் தமிழ் மானம்

காக்க  மாதவி  மாலை பெற்றான்

கண்ணகி  அவளும் நாடகம் பார்த்தாள்

கணவன் செயலைச் சரியே என்றாள்

மாதவி வீட்டில் கோவலன் செல்வம்

அவளே அறியாமல் வீட்டார் பெற்றார்

திருப்பித் தந்தாள் அவளே தமிழச்சி

ஒற்றைச் சிலம்பு போதும் என்றான்

 மற்றது என்தவறு சுட்டி ஒலிக்கும்

இதுவே கோவலன் தூய நெஞ்சம்

ஒற்றைச் சிலம்பும் ஒலித்தது

திராவிடச் செல்வம் பிரதி பலித்தது

கருத்துகள் இல்லை: