புதன், ஜனவரி 22, 2014

காரைக்குடி கம்பன் கழகத்தின் 2014 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதக் கூட்டம் - அழைப்பு

கம்பன் கழகம்
காரைக்குடி

அன்புடையீர்
வணக்கம்
கம்பன்புகழ் பாடிக் கன்னித் தமிழ் வளர்க்கும் பெப்ரவரி மாதக் கூட்டம் 1-2-2014 ஆம் தேதி சனிக்கிழமை மாலை 6.00 மணிக்கு கம்பன் மணிமண்டபத்தில் நிகழும். திரு. கம்பன் அடிசூடி தம் பெற்றோர் நூற்றாண்டு நிறைவு நினைவாக நிறுவியுள்ள மீனாட்சி பழனியப்பா அறக்கட்டளையின் ஏழாம் ஆண்டு ஆய்வுச் சொற்பொழிவினை கம்பனில் விண்ணோடும் மண்ணோடும் என்ற தலைப்பில் முத்தமிழ் அறிஞர் ஞானவாணி பேராசிரியர் திருமதி இளம்பிறை மணிமாறன் நிகழ்த்துகிறார்கள்.
கவிச்செம்மல் கவிஞர்கோ கவிமாமணி, தமிழறிஞர்,டாக்டர்.ரெ.முத்துக்கணேசனார் தலைமை ஏற்றுச் சிறப்பிக்கின்றார்கள்.
கம்பன் புகழ்பாடிக் கன்னித் தமிழ் வளர்க்கஅன்பர்கள் யாவரும் வருக.

11.1.2014
காரைக்குடி அன்பும்பணிவுமுள்ள
கம்பன் கழகத்தார்

நிகழ்நிரல்
மாலை 6.00மணி இறைவணக்கம்
கம்பன் கற்பகஆசான்மார்
திருமதி பாண்டிச்செல்வி, செல்வி கோமதி

6.05. வரவேற்புரை
திரு கம்பன் அடிசூடி

6.15. தலைமைஉரை
டாக்டர் ரெ. முத்துக்கணேசனார்

6.30
கம்பனில் விண்ணோடும்மண்ணோடும் -உரை
பேராசிரியர் இளம்பிறை மணிமாறன்

நன்றியுரை
சிற்றுண்டி
நிகழ்ச்சி உதவி - மீனாட்சி பழனியப்பா அறக்கட்டளை

கருத்துகள் இல்லை: