வியாழன், நவம்பர் 03, 2011

காரைக்குடி கம்பன் கழக நவம்பர் மாதக் கூட்டம்

காரைக்குடி கம்பன் கழகத்தின் நவம்பர் 2011 மாதக் கூட்டம் 5-11-2011 அன்று நடைபெற உள்ளது. அனைவரும் கம்பன் மணிமண்டபத்திற்கு 6 மணியளவி்ல் வந்து சேரவேண்டியது. தேவகோட்டை புனித சின்னப்பர் கல்வியியல்கல்லூரியின் கணினி அறிவியல் துறை மாணாக்கி செல்வி வீ.பிரபா கம்பனில் இளைய தலைமுறை என்ற தலைப்பிலும், காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழக தமிழாய்வுத் துறை இணைப் பேராசிரியர் முனைவர் சே. செந்தமிழ்ப்பாவை அவர்கள் கம்பனில் இலக்கிய மரபும் மாற்றமும் என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்த உள்ளனர். கம்பன் புகழ்பாடிக் கன்னித்தமிழ் வளர்க்க அனைவரும் வந்திட அன்புடன் வேண்டுகின்றோம்.

3 கருத்துகள்:

முனைவர் இரா.குணசீலன் சொன்னது…

காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழக தமிழாய்வுத் துறை இணைப் பேராசிரியர் முனைவர் சே. செந்தமிழ்ப்பாவை அவர்கள் எனது முனைவர் பட்ட நெறியாளராவார்..

இவரது பேச்சை கேட்க வர இயலவில்லை ஆயினும் விழா சிறக்க என் மனம் நிறைந்த வாழ்ததுக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்..

மதன்மணி சொன்னது…

மதன்மணி பேசுகிறேன்
நலமா பதிவரே
மிகவும் நன்றாகவுள்ளது
விழா சிறக்க மனம் நிறைந்த வாழ்த்து

மு. பழனியப்பன் சொன்னது…

நன்றி
தங்களி்ன் வருகைக்கு