
ப




உலகத் திருக்குறள் பேரவை புதுக்கோட்டைக் கிளையின் மாதக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் பாவலர் பொன் கருப்பையா அவர்களின் குழுவினரின் தமிழிசை நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும் முனைவர் வைர.ந தினகரன், திரு குணசேகரன் ஆகியோர்க முன்னிலை வகித்தனர். இவ்விழாவில் வள்ளுவரும் மேலை நாட்டறிஞர்களும் என்ற தலைப்பில் முனைவர் சு. கணேசன் அவர்கள் உரையாற்றினார். இவர் தம் உரையில் பேகன், சேக்ஸ்பியர் முதலான ஆங்கில இலக்கியவாதிகள் எவ்வாறு வள்ளுவருடன் ஒத்துப் போகின்றனர் என்பதை எடுத்துரைத்தார். இதனைத் தொடர்ந்து திரு பாபு ராஜேந்திரன் அவர்கள் வருங்காலம் வசந்த காலம் என்ற தலைப்பில் எழுச்சியுரையாற்றினார். இவ்விழாவில் புதுக்கோட்டை இலக்கிய அன்பர்கள் பலர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக