புதன், மே 25, 2011

காரைக்குடி கம்பன் கழக அறக்கட்டளை சொற்பொழிவு


காரைக்குடி கம்பன் கழகத்தின் புதுமையான முயற்சி ஒன்று வரும் ஜூன் மாதம் நான்காம் தேதி சனிக்கிழமை நிகழ உள்ளது.

காரைக்குடி கம்பன் கழகத்தின் சார்பாக சென்ற ஆண்டு முதல் மாதக் கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த மாதக் கூட்டங்களில் கம்பன் பற்றிய ஆய்வுரைகள் பல அறிஞர்களால் வழங்கப் பெற்று வருகின்றன.

மாதக் கூட்டம் ஆரம்பிக்கப் பெற்று ஓராண்டு நிறைவு பெற்றதைக் கொண்டாடும் வகையில் அறக்கட்டளை ஒன்று நிறுவப்படுகிற்து. சென்னை நந்தனம்கல்லூரியின் தமிழ்த்துறை இணைப்பேராசிரியராக விளங்கும் முனைவர் ந. சேசாத்திரி அவர்கள் தன் தாயார் பெரும் புதூர் கோ. வேதவல்லி அவர்கள் நினைவாக இந்த அறக்கட்டளையை நிறுவியுள்ளார்.

இதுவரை கம்பன் ஆய்வு நிகழாத துறையில் சிறந்த அறிஞரைக் கொண்டு செய்யப்படும் இப்பொழிவு நூலகவும் அன்றே வெளிவருகிறது. வரும் ௪ ஆம் தேதி சனிக்கிழமை மாலை ஆறுமணிக்கு முனைவர் சொ. சேதுபதி அவர்கள் கம்பனைச் சுற்றுச் சூழல் நோக்கில் ஆராய்ந்து கம்பன் காட்டும் உலகு என்ற தலைப்பில் உரையாற்றுகிறார்.
இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் மற்றும் ஆழ்வார் அடியார் பரகாலன் ஆகியோர் இவ்விழாவில் கலந்து கொள்ள உள்ளனர்
கம்பன் மணிமண்டப அரங்கில் நடைபெறவுள்ள இந்நிகழ்விற்கு வருகை தர வேண்டுகிறோம்.

கருத்துகள் இல்லை: