


இன்று (19.09.2010)உலகத்திருக்குறள் பேரவையின் முப்பெரும் விழா புதுக்கோட்டையில் நடைபெற்றது. இவ்விழாவில் நல்லாசிரியர் சிவாஜி தலைமையேற்றார். இதில் வால்ட் விட்மன் கவிதை உலகம் பற்றி லியோ ஜோசப் அவர்களும், திருக்குறள் புதிய சிந்தனைகள் பற்றி ஜெகந்நாதன் அவர்களும், பாரதி பற்றி தங்கம்மூர்த்தி அவர்களும் உரையாற்றினர். மேலும் நல்லாசிரியர் விருது பெற்ற திரு கஸ்தூரி நாதன் அவர்களும், திரு சுப்பிரமணியன் அவர்களும் பாராட்டப் பெற்றனர். மேலும் இவ்விழாவில் திலகவதியார் ஆதீனகர்த்தர் அவர்களும் கலந்து கொண்டுச் சிறப்பி்த்தார்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக