செவ்வாய், ஏப்ரல் 25, 2006

கைவினை


குடைகளின் திருவிழா
நூலாலும் தாளாலும்
பற்பல வண்ணங்களில்

வாழை மட்டையில்
செருகி
வலம் வரும் தெருவிழா

கடைகளில்
எல்லாம் நிச்சயம் இடம் பிடிக்கும்

5 ரூபாய்,
10 ரூபாய்
கூவி விற்கும் சிறுவர்கள்

பிள்ளையார்
பின்னால் வைத்தபின் அலங்காரம் நிறைவெய்தும்

வீதிக்கு வீதி
கைவினைக் கலைஞர்கள்
எவர் பதிய வைக்கப்போகிறார்
இவர்களின் கலையாற்றலை

கருத்துகள் இல்லை: