திங்கள், மே 15, 2006

வேதவதி என்பவள்

என் வலைப்பதிவில் இடம் பெற்றுள்ள கம்பனில் சாபங்கள் என்ற கட்டுரையைப் படித்துவிட்டு என்ஆர் என்ற வலைப்பூ நண்பர் வேதவதி என்பவள் யார் என்ற கேள்வியை எழுப்பினார். அதற்கான பதில் இதோ
வேதவதி என்பவள் மகாலட்சுமியின் அவதாரம். இவள் தவம் செய்து கொண்டிருந்தபோது திக்குவிஜயம் செய்த இராவணன் இவளின் அழகில் மயங்கி இவளின் கூந்தலைப் பிடித்து இழுத்தான். இராவணன் தொட்டான் என்பதால் அவள் தீ புகுந்தாள். புகும் போது அடுத்த பிறவியில் உனக்கு விருப்பம் இல்லாத பெண்ணை நீ தொட்டால் உன் தலை சுக்கு நூறாகிவிடும் என்று சாபம் தந்தாள்.

பின் குறிப்பு
மாணவர்களிடம் பாடம் நடத்தும் போது இக்கதையை விளையாட்டாகச் சொல்வது உண்டு. விருப்பம் இல்லாத பெண்ணை ஒரு ஆடவன் தொட்டால் அவன் தலை வெடித்துச் சிதறும் என்ற சாபத்தை இன்றைக்குக் கொண்டு வந்தால் நகரப் பேருந்தில் பல ஆண்களின் தலை வெடித்துக் கொண்டே இருக்கும் என்ன சற்றேனும் நகைப்பு வருகிறதா

5 கருத்துகள்:

ENNAR சொன்னது…
இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.
ENNAR சொன்னது…

// புகும் போது அடுத்த பிறவியில் //
யாருடைய அடுத்த பிறவியில் இராவணருடைய அடுத்த பிறவியிலா? அப்படியென்றால் இந்த (கூந்தளையிழுத்த) பிறவியில் அவர் யார்?
இந்த word verification எதற்கு

palaniappan சொன்னது…

ண்பருக்கு வணக்கம்
தாங்கள் அனுப்பி பதில்களுக்கு நன்றி
வேதவதி தீ புகுகிறாள்.
அடுத்த பிறவி என்பது இங்குத் தேவையில்லாத வார்த்தைகள்
வேதவதி தீ புகுந்தது முதல் இராவணனுக்கு இந்தச் சாபம் விளையாடத் தொடங்கிவிட்டது
தேவையில்லாத வார்த்தைக் குழப்பத்திற்கு மன்னிக்க
மேலும் ஒரு செய்தி
நான் சென்னையில் இருந்து புதுக்கோட்டை மாமன்னர் கல்லூரிக்கு இடம் பெயர உள்ளேன்
இயன்றால் நேரில் சந்திப்போம்

palaniappan சொன்னது…

சரி தலைவா
அது என்ன word count
2, 3பேர் இது குறித்துக் கேள்வி எழுப்பிவிட்டார்கள்
தயவு செய்து அது குறித்து விளக்கம் தருக

ENNAR சொன்னது…

சரி நான் திருச்சிக்காரன் முடிந்தால் சந்திப்போம்
இப்பொழுது அந்த word verification தங்களுடையதில் இல்லை
நன்றி