ஞாயிறு, ஜனவரி 09, 2022

வள்ளுவரின் பாதை (கவிதை)

siragu thiruvalluvar1

(வலியறிதல் – அதிகாரம் – புதுக்கவிதையில்)

  • வள்ளுவர் நடத்தும் அரசியல் பாடம்  வலியறிதல்.

 

  • உலகில் ஒவ்வொரு மனிதருக்கும்

ஒரு கடமை இருக்கிறது.

அக்கடைமையை ஏற்று நடத்தவே அவன் பிறக்கிறான்.

அவனுக்கான காரியம் அவனாலேயே முடிய வேண்டும்.

அவ்வாறு  கடமை முடிய என்ன செய்யவேண்டும்.

 

  • தன்னை உணர்தலும்

தனக்கான கடமையை அறிதலுமே  முதற்படி

 

  • தன்னால் இது செய்ய இயலுமா என்று

தெளிந்தபின் செயலில் இறங்குவதே சிறப்பு

இத்தெளிவின்றிப் பாதியில் வீணாய்ப் போவதும் போனதும் அதிகம்.

 

  • தன்னை உணர்ந்தபின் தன் துணையின் வலிமையும் உணர்க

காரியங்கள் கைகூட துணைவரோடு ஒத்து செல்க

எதிராக நிற்பவற்றின்  வலிமைகளையும் அளந்தறிக

எடுத்த காரியத்தை முடிக்க தொடர்ந்து தொய்வின்றி செல்க…வெற்றி நமதே

 

  • ஊதினால் பறக்கும் மயில் தோகை என்றாலும்

அளவுக்கு அதிகம் சுமையானால் வண்டியின் அச்சு முறிந்துபோகும்.

 

  • மரமே நமதென்றாலும்

அதன் நுனிக் கொம்பு ஏறினால் அழிவுதான்.

 

  • கொடுப்பதானாலும், கொள்வதானாலும்

அளவறிந்து எதையும் செய்க! அதுவே வாழ்க்கை முறைமை

 

  • செலவைக் குறைக்க வரவு பெருகும்

வரம்பு மீறி வாரிக்கொடுக்க இருப்பே இல்லாமல் ஆகிவிடும்

வலியறிந்தால் வலியின்றி வெற்றி பெறலாம்…….

 

கருத்துகள் இல்லை: