வெள்ளி, நவம்பர் 21, 2014

இணையவியலாளர்களால் எடுத்தாளப்பெற்ற என் எழுத்துகள்

என் கட்டுரைகள் எங்காவது மேற்கோளாகக் காட்டப்பெற்றுள்ளதா என்று அவ்வப்போது இணையத்தில் தேடுவது உண்டு. அவ்வகையில் சில புதிய தகவல்கள் இன்று கண்ணில் பட்டன.

1. எழுத்தாளர் முருகபூபதி வரைந்த மெல்பனில் நடைபெறவுள்ள அனுபவப் பகிர்வு என்ற கட்டுரையில் என் கட்டுரையை வாசித்தமையைத் தெரிவித்துள்ளார்.


சிட்னியிலிருந்து      எழுதிக்கொண்டிருக்கும்      மாத்தளைசோமு இலங்கையிலும்      தமிழ்நாட்டிலும்      வாழ்ந்த      காலப்பகுதிகளிலும்  சிறுகதைகள்      எழுதிய      மூத்த      எழுத்தாளர்.     அவரது      சில    கதைகளில் செம்மொழி     இலக்கிய    மரபின்     தாக்கம்     இருப்பதாக     முனைவர் மு. பழனியப்பன்       எழுதியிருந்த     பதிவொன்றை     அண்மையில்    திண்ணை   இணையத்தளத்தில்    படித்தேன்.

2. பேராசிரியர் இரா. குணசீலன் உளவியல் சார்பான கட்டுரைகளைத் தொகுக்கும்போது

22. முனைவர்.மு.பழனியப்பன் அவர்கள் புதுக்கோட்டை மா. மன்னர் கல்லூரியில் தமிழ்ப் பேருரையாளராகப் பணியாற்றி வருகிறார். இவரது “பெண்ணிய உளவியல் நோக்கில் வெள்ளி வீதியார் பாடல்கள்” என்னும் கட்டுரை இலக்கியங்களி்ல் உளவியல் கூறுகளை அழகாகப் படம்பிடித்துக் காட்டுவதாக உள்ளது.

என் கட்டுரையை இனம் காட்டியுள்ளார்.
 




 

கருத்துகள் இல்லை: