வியாழன், ஜூலை 16, 2009

பெண்ணியத்தின் மூன்று நிலைகள்

பெண்ணியம் அதன் துவக்க காலத்தில் இருந்து இற்றைக் காலம் வரை முன்று முக்கிய நிலைகளைக் கடந்து வந்துள்ளது. அவற்றை முதல் அலை, இரண்டாம் அலை, முன்றாம் அலை என்று வகைப்படுத்தி உரைக்கின்றனர் பெண்ணிய வாதிகள்.முதல் அலை பெண்ணியத்தின் துவக்ககால நிலையை இம்முதல் அலை குறிப்பிடுகிறது. இவ்வலை பத்தொன்பதாம் நூற்றாண்டளவில் தோற்றம் கண்டது. இது பெண்களின் சமுக மற்றும் சட்டங்கள் இவற்றில் காணப்படும் ஆண் பெண்ணுக்கான ஏற்றத் தாழ்வுகளை எடுத்துரைத்து அவற்றைச் சமப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் பெண்ணியவாதிகளால் கையாளப்பெற்றது. நடுத்தரப் பெண்ணின் கல்வி, வேலைவாய்ப்பு, திருமணச் சட்டங்கள் போன்றவற்றில் காணப்பட்ட சமமற்றத் தன்மையை எதிர்த்துப் போராடுவதாக இவ்வியக்கம் அக்காலத்தில் அமைந்திருந்தது. இது பணிக்குப் போகும் பெண்களின் இன்னல்கள் குறித்துக் கூட கருத்துத் தெரிவிக்க இயலாத தொடக்க கால பெண்நிலை வாத அடிப்படை வாய்ந்ததாக இவ்வலை இருந்தது. மேலும் இது நவீனத்துவ அடிப்படையில் இவ்வியக்கத்தை நடத்திச் செல்லவில்லை. இத்தகைய பின்னடைவுகள் இருந்த போதும் இதுவும் ஓரளவிற்குத் தான் கொண்ட கொள்கைளில் வெற்றிகண்டது. இதன் முலம் பெண்கள் உயர்கல்வி கற்க இருந்த தடைகள் நீங்கின. பெண்களின் கல்வியில் பல மாற்றங்கள் உருவாக இம்முதல் அலை காரணமாக அமைந்தது. பெண்கள் ஆண்கள் பங்கேற்கும் அனைத்துத் தகுதித்தேர்வுகளிலும் பங்கேற்றுத் தேர்வு எழுதும் வாய்ப்புகளைப் பெற்றனர். இதன் காரணமாக இங்கிலாந்து நாட்டில் ஆயிரத்து எண்ணூற்று எழுபதாம் ஆண்டில் திருமணமான பெண்களின் சொத்துரிமை குறித்த சட்டம் இயற்றப்பட்டது. மேலும் பெண்களுக்கு ஓட்டுரிமையைப் பெற்றுத்தந்தது. மணவிலக்கு, குழந்தை பராமரிப்பு போன்றவற்றில் ஓரளவிற்கு பெண்களின் சமத்தன்மை எடுத்துரைக்க வழிகள் செய்யப்பெற்றது. முதல் உலகப்போரின் நிறைவு வரை பெண்ணியத்தின் முதல் அலை எனப்படும் இவ்வெழுச்சி மெல்ல நாடுகள்தோறும் வீச ஆரம்பித்தது.இரண்டாம் அலை முதல் உலகப்போரின் நிறைவில் உலகஅளவில் பல மாற்றங்கள் ஏற்பட்டன. இதன் காரணமாக பெண்களின் சமுக வாழ்விலும் பல முன்னேற்றங்கள் தோன்ற வேண்டும் என்ற சிந்தனை எழுந்தது. ஆயிரத்துத் தொள்ளாயிரத்து அறுபது வாக்கில் பிரான்ஸ், ஐரோப்பா, அமெரிக்கா போன்ற நாடுகளில் பெண்ணியக் கூறுகள் அடங்கிய பல நிகழ்வுகள் நடக்கத் தொடங்கின. இரண்டாம் பாலினமாகத் தள்ளிவைக்கப் பெறும் பெண்கள் அதனின்று முன்னே வர திடமாகச் செயல்பட்டனர். ஆயிரத்துத் தொள்ளாயிரத்து அறுபத்தெட்டாம் ஆண்டில் நடத்தப் பெற்ற மிஸ் அமெரிக்கா என்ற அழகிப்போட்டிக்கு எதிராக அமெரிக்காவில் மிகப் பெரிய மறுப்புக் கூட்டங்களும்,பேரணிகளும் நடைபெற்றன. இது குறிக்கத் தக்க விழிப்புணர்வை பெண்களிடம் ஏற்பட்டிருப்பதை எடுத்துக்காட்டியது. இவ்வகையில் பல போராட்டங்களை உலக அளவில் பெண்கள் நடத்தி வந்தனர். இக்காலத்தில் பெண்ணியம் கறுப்புப் பெண்ணியம், ஓரினச்சேர்க்கைப் பெண்ணியம், சமுகப் பெண்ணியம் எனப் பலவகைகளில் பிரிவு பட்டு வளரத் தொடங்கியது. ஆயிரத்துத் தொள்ளாயிரத்து அறுபத்தெட்டில் பிரிட்டனில் போர்டு மகிழ்வுந்து தயாரிப்பகத்தில் நிலவிய ஆண், பெண் ஊதிய ஏற்றத்தாழ்வைக் கருத்தில் கொண்டு பெண்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வென்றனர். இதுபோன்று உலகம் முழுவதும் பல நிலைகளில் பல போராட்டங்களைச் செய்ய இவ்வியக்கம் வளர்ந்தது. தனது என்பதே தன் அரசியல் என்ற முழக்கம் ( வாந நசளடியேட ளை டிடவைஉயட) என்ற பதாகை இவ்வியக்கத்தின் முக்கியமான முழக்கமாக இருந்தது. இவ்விரண்டாம் அலை பெண்களுக்கான சமுக வாய்ப்புக்களைப் பெற்றுத் தருவதில் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டது. மேலும் இனப் பெருக்கம், விழைவு, கலாச்சாரக் கட்டு என்ற சுழல்வட்டத்தில் பெண்கள் தங்களுடைய சுய வாழ்வை இழந்து விடுகிறார்கள் என்பதையும் இவ்வலை எடுத்துக் காட்டியது. மேற்கத்திய நாடுகளில் இவ்வலை பெண்களின் நிலை குறித்த விழிப்புணர்வு எண்ணங்களை விதைத்தது. மற்றம் உலகு தழுவிய பெண் விடுதலை முழக்கங்களுக்கு இடமளித்தது.இவ்வகையில் பெண்ணியத்தின் இரண்டாம் அலை செயல்பட்டது.முன்றாம் அலை பெண்ணியத்தின் முன்றாம் அலை தோன்றக் காரணமாக இருந்த பெண் ரெபாக்கா வாக்கர் என்பவள் ஆவார். இவர் அலைஸ் வாக்கர் என்பவரின் குழந்தை ஆவார். மேலும் இவர் குளோரியா ஸ்டினிம் என்பவரால் அவரின் கொள்கை சார் குழந்தையாக வளர்த்தெடுக்கப் பட்டவர். இவர் எழுதிய "நானே முன்றாம் அலை '' ( ஐ யஅ கூந கூசைன றயஎந ) என்ற தலைப்பிட்டு எழுதியக் கட்டுரையே முன்றாம் அலை தோன்றக் காரணமாக இருந்தது. இந்த கட்டுரையின் முலம் இளம் பெண்ணியவாதிகள் ஒருங்கு திரண்டனர். இதன் வழியே தங்களின் வயது, இனம், பால், பிறப்பிடம், பொருளாதார நிலை, விழைவு நிலை, கல்வி நிலை போன்றவற்றில் ஏற்பட்டுள்ள தடைகளை, சமமற்ற தன்மைகளை வெளிப்படுத்தி அவற்றில் தன்னிறைவை அடையச் செய்ய விரும்பும் மாற்றங்களை இவர்கள் தேட ஆரம்பித்தனர். சமுக இயக்கதிற்கான வழியைத் தேடுவதாக இவ்வலை அமைந்தது. ஆயிரத்துத் தொள்ளாயிரத்துத் தொண்ணூற்றாறில் தோற்றம் பெற்ற இந்தப் பெண்ணிய அலை பெண்ணியத்தின் முழுத் தோற்றத்தையே மாற்றி அமைத்தது. இளம் பெண்கள் புற உலகால் பாதிக்கப் பெறும் நிகழ்வுகளுக்கு எதிராக உலகு தழுவிய குரலாக இவ்வமைப்பின் குரல் ஒலிக்கத் தொடங்கியது. எங்கு இளம் பெண்களுக்கான முன்னேற்றச் செயல்கள் நடத்தப்பெறுகின்றனவோ அங்கெல்லாம் பொருளாதார அடிப்படையிலும் இவ்வமைப்பு உதவி செய்து வருகிறது. இவ்வகையில் பெண்ணிய இயக்கம் முன்று அலைகளாகக் கால நிலையில் பிரிந்து பெண்களை முன்னேற்றி வருகிறது.

கருத்துகள் இல்லை: