ஞாயிறு, அக்டோபர் 07, 2007

சொல்லி மாள்வதில்லை

தாத்தா இறந்து பல நாள்கள்
ஆகின்றன
அவர் இறப்பின் துக்கத்தின்
கடைசி நிமிடங்கள் சந்திக்க
இயலாதாயின
அதனால்
அவர் இன்னும் இருப்பதாக மனம் எண்ணுகிறது
அவர் சொல்லித்தந்தது பல நல்ல விசயங்கள் விருந்துக்கு அழைத்துப்போவார்
வேண்டுவன குறைவன பார்த்து விருந்தை
ருசிக்கக் கற்றுத் தந்தார்
இலையில் மிச்சம் மீதி
குறைவின்றி முழுமையாக்கும்
பழக்கம் அவரிடம் இருந்து பெற்றதே

இன்னும் பல நினைவு கூர்வார்
என் அப்பா அவருக்கு மச்சினன் முறை
அதனால் அவரின் சிறு வயதுக் கன்னங்களைக்
கடித்து மகிழ்ந்தது கூறுவார்।

என் அப்பா அவரின் மருமகன் ஆனது
அடுத்த நிகழ்வு

தபால் நிலையத்தில் சண்டை போட்ட
விசயம் சொல்வார்।
வங்கியில் வேலை பார்த்தவர்
இப்போதைய வங்கிப்
பணியாளர்களின் மீது நம்பிக்கை கொள்ளாதவர்
சேர்த்து வைக்கப் பழகியவர்
அது தனக்கல்ல என தன்னைச்
சுருக்கிக் கொண்டவர்
மகன்கள் இப்போது பெருக்கிக் கொண்டிருக்கிறhர்கள்
மகளுக்கு ஒன்றும் சேர்க்கவில்லை
என்ற நினைப்பில் உறுதியாய் நின்றவர்
கடைசி காலணுகளில்
தன் துணை இழந்து
உணவிற்கு பிறர் கரம் நோக்க வேண்டிய துயரம் ஆறாது
மனைவியின்
அருமை அப்போது மட்டுமே
உணர்ந்தவர்
இறப்பின் மிச்சங்கள் அவரின்
கைப்பிடி அறுந்துபோன பெட்டியில்
இருந்ததாய் அம்மா சொன்னாள்
வங்கியின் நிரந்தர வைப்புகள் மகன்கள்
பெயரில் கெட்டியாய் சாகும் வரை
காப்பாற்றியது அதுமட்டுமே
இன்னும் இருக்கிறார்
இருபது வருடங்களுக்கு நிரந்தர
வைப்பின் கால அளவு அது வரை உள்ளதே

2 கருத்துகள்:

மங்கை சொன்னது…

ம்ம்ம்ம்

cheena (சீனா) சொன்னது…

தாத்தாவின் இயல்பை அப்படியே படம் பிடித்துக் காட்டி இருக்கிறார். வங்கியில் வேலை பார்த்தும் தற்போதைய வங்கித் தோழர்கள் மீது நம்பிக்கை வைக்காதவர். மனைவியின் அருமையை கடைசித் தருணத்தில் மட்டுமே உணர்ந்தவர். மகன்களுக்குச் சேர்த்தவர் - மகளை மறந்தவர். விருந்தில் இலயில் மிச்சம் வைக்காமல் உண்ணும் பழக்கம் கொண்டவர். சிறந்த பதிவு