வெள்ளி, பிப்ரவரி 09, 2007

அழியா நிறம் தேவையில்லை

நேரத்திற்கு ஏற்றார்போல்
நிறம் மாறும் பச்சை மனிதர்கள்

தன்னையே மாற்றிக்
கொள்ளத் தயங்காத
இவர்களின் குறி சுயநலம் மட்டுமே
இவர்கள்

நாக்கின் சுழற்சியில்
பொய் பல நாள்
வெளியாகும்
மெய்
ஒரு நாள் கூட வெளிவராது

நடிப்பதில்
நாகரீகக் காரர்கள் இவர்கள்

ஏதோ
உலகின் நன்மைக்காகத்
தன்னை பிறப்பித்ததாகக்
கௌரவம் பேசுவார்கள்

இறுதிவரையிலும்
இவர்கள் தோற்பது கிடையாது
எவர்க்கு எந்நிறம்
தேவையோ அந்நிறம்
இவர்களின் நிறம்

எறும்பு கூட
இவர்களின் சொல்படி
நடப்பதாக நம்பிக்கை கொள்கிறார்கள்

உலகில்
எத்தனை எறும்புகள் உள்ளன
என்ற கணக்கெடுப்பில்
உள்ள நியாயம் இவர்களுக்குத் தெரியாது

தன்னைத் தானே
பார்த்துப் பாராட்டிக் கொள்ளும்
விநோத வழக்கம் இவர்களுக்குள் இருக்கும்

எச்சரிக்கையா இருங்கள்
உங்கள் நிறத்தை
இவர்கள் அழித்துவிடக் கூடும்

1 கருத்து:

கோவி.கண்ணன் சொன்னது…

பழனி அப்பன் சார்,

//உலகில்
எத்தனை எறும்புகள் உள்ளன
என்ற கணக்கெடுப்பில்
உள்ள நியாயம் இவர்களுக்குத் தெரியாது//

அருமையான கவிதை, உங்கள் மற்ற எழுத்துக்களையும் தொடர்ந்து படித்துவருகிறேன். அருமை.