புதன், அக்டோபர் 04, 2006

இலவசமாய் ஒரு மடல்


பைசா செலவில்லாமல் ஒரு கடிதம் அனுப்ப வேண்டும். முடியுமா? என்று யாராவது சவால் விட்டால் முடியும் என்று நாமும் திருப்பி அவர்களுக்குச் சவால் விடலாம். அப்படி பைசா செலவில்லாமல் இலவசமாய் மடல்களை அனுப்ப, பெற உதவுகிறது மின்னஞ்சல்.

அஞ்சல் நிலையத்திற்குச் சென்று காசு கொடுத்து அஞ்சல் முத்திரை வாங்கி அதனை ஒட்டி அது போய்ச் சேரும்வரை காத்திருந்து அதன்பின்னர் பெற்றவர் பதில் எழுதி அது வரும் வரை காத்திருந்து என்ற காலம் மலையேறிப் போய்விட்டது. உடனே உலகத்தின் எந்த மூலைக்கும் இரண்டு அல்லது மூன்று நிமிடங்களில் மடல் சென்று சேரவும் , சேர்ந்த இடத்தில் மடலைப் பார்த்தார்களா இல்லையா என்பதை அறிந்து கொள்ளவும் வசதி மின்னஞ்சலில் உண்டு. எனவே மின்னஞ்சல்கள் தற்போது விரைவு தபால் வசதி என்பதில் ஐயமில்லை.

இத்தகைய விரைவுத் தபாலை அதன் வசதியைப் பெறுவது குறித்துச் சில செய்திகளை இக்கட்டுரை விளக்குகிறது.

மின்னஞ்சல்களின் தனித்துவம் இன்னும் பல சிறப்புகள் மின்னஞ்சல்களுக்கு உண்டு. மின்னஞ்சல்களின் தனி¢த்துவம் ஒரு வரி மட்டுமே உள்ள அதன் முகவரிதான். உலகம்¢ முழுவதற்கும் அந்த ஒரு வரி முகவரி தனித்து ஒருவருக்கு மட்டுமே உள்ளதாக அமைக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக அவர்க்கு உரிய உலக முகவரியாக அது விளங்குகிறது. எனவே இந்த முகவரியால் குழப்பம் ஏற்படுவதில்லை. இந்த முகவரியைத் தற்போது பெயரட்டைகளி¢லும் ( visiting card) பயன்படுத்திக் கொள்ளுகின்றனர். எனவே மனிதன் ஓர் உலக உறுப்பினன் என்பதை மின்னஞ்சல் முகவரி உறுதி செய்கிறது. குறிப்பிட்ட ஒருவருக்கு வரும் மின்னஞ்சல்களை வேறு யாரும் பிரித்துப் பார்த்துவிட இயலாது. ஏனெனில் மின்னஞ்சல்கள் குறிப்பிட்ட ஒருவரின் கடவுச் சொல்லைப் ( pass word) பெற்று உள்ளன . இதன்மூலம் அவர் ஒருவர் மட்டுமே இதனைப் பார்க்க முடியும். பதில் அளிக்க முடியும். பிரிக்க முடியும்.

மின்னஞ்சல்களாக கடிதம் மட்டும் அல்லாமல், படங்கள், கோப்புகள் முதலானவற்றையும் அனுப்பலாம். இது மிக முக்கியமான இன்றியமையாத வசதி.

இவ்வாறு நாடு மாறினாலும் வீடு மாறினாலும் மாறத முகவரியைப் பெற்றுத் தருகிறது மி¢ன்னஞ்சல்.

இதன் பயன்பாட்டைப் பற்றிக் கூறிக் கொண்டே போகலாம். இதன் செயல்பாட்டைச் சற்று பார்ப்போம்.

மின்னஞ்சல் உருவாக்கம் மின்னஞ்சல் முகவரிகளைப் பெற பல வழிகள் உண்டு. பல சேவை நிறுவனங்கள் இதற்காக செயல்பட்டு வருகின்றன. இணைய இணைப்பு ( web mail) என்ற வகைப்பட்டனவாக இவற்றைக் கொள்ளலாம். யாகூ (Yahoo), ஹாட்மெயில் (hot mail), ரீடிப்மெயில் (rediffmail), ஜீமெயில் ( g.mail ) போன்றன இவ்வகையில் குறிப்பிடத்தக்கன. இவற்றுள் ஜீமெயில் சற்று வேறுபட்டது. இதில் முகவரி பெற முன்னர் முகவரி பெற்ற ஒருவர் உங்களுக்கு வரவேற்பு மடல் அனுப்ப வேண்டும். அதன் பின்னரே நீங்கள் இந்த நிறுவனம் வழியாக மின்னஞ்சல் முகவரியைப் பெறமுடியும். மற்றவற்றிற்கு நாமாகவே சென்று முகவரிகளைப் பெற்றுக் கொள்ளலாம்.
இவ்வகை தவிர மற்றொரு வழியும் உண்டு. இணைய இணைப்பு பெறும் ஒவ்வொருவருக்கும் இணைய இணைப்பைத் தரும் ஒவ்வொரு நிறுவனமும் மின்னஞ்சல் வசதியைப் செய்து தருகின்றன. தற்போது இந்தியாவைப் பொறுத்தவரை பிஎஸ்என்எல் நிறுவனம் இவ்வகையில் சிறந்ததாக உள்ளது.
முகவரியை அமைத்துக் கொள்ளும் போது சிலவற்றைக் கவனத்தில் வைத்துக் கொள்ளவேண்டும். முகவரியின் ஒரு வார்த்தை என்பது இப்படித்தான் இருக்கும். Karthi2004@ yahoo.co.in இ¢ந்தவகையில் தான் முகவரி இருக்கும். இவ்வாறு அமைக்கும் போது குறிப்பிடத்தகுந்தவரின் பெயர் என்ற அளவில் அமைத்துக் கொண்டால் மின்னஞ்சலைப் பெறுபவர்கள் உடன் உணர்ந்து கொள்ள இயலும். பெயருக்குப் பின்னுள்ள ஆண்டு இந்தப் பெயரைப் பலரும் கொண்டிருக்கும் வேளையில் அதிலிருந்து இப்பெயரை வேறுபடுத்தும் நோக்கத்¢தில் அமைக்கப் பெற்றுள்ளது. மற்றவை எல்லாம் மின்னஞ்சலின் பொது அமைப்புகள்.

இவ்வகையில் முகவரி பெறும்போது சொந்த தகவல்கள் சிலவற்றை நாம் அதற்கான விண்ணப்பத்தில் நிரப்ப வேண்டும். இவற்றில் மிக முக்கியமான பகுதி கடவுச் சொல் என்பதாகும். இந்த கடவுச் சொல் என்பது பெரும்பாலும் ஆறு எழுத்துகள் அல்லது எண்கள் என்பதாக அதற்கு மேம்பட்டதாக அமைய வேண்டும் என்பது ஒரு நியதி. இந்தக் கடவுச் சொல்லை அமைக்கும்போது அது எளிதில் மற்றவரால் உணரப்படாத அளவில் இருக்கவேண்டும். அதே நேரத்தில் மறந்துவிடக் கூடாததாக இருக்க வேண்டும். பிறந்தநாட்களின் எண்கள், பிறந்த இடத்தின் பெயர் முதலானவையாக இவற்றை அமைத்துக் கொள்வது சிறப்பு. சிலர் 123456 என்ற அளவில் மிக எளிதாகக் கடவுச் சொல்லை அமைத்துக் கொள்வார்கள். இதனைச் சிலர் வேறுவகையில் பயன்படுத்திக் கொள்ள இயலும். எனவே கடவுச் சொல்லில் கவனம் தேவை.
அடுத்து கல்வித் தகுதி, பால், நாடு, தொலைபேசி எண், முகவரி முதலானவை கேட்கப் பெற்றிருக்கும். இவற்றிற்கு உறுதியான உண்மையான தகவல்களை அளிப்பது நல்லது. இவ்வளவும் செய்த பிறகு மின்னஞ்ல் முகவரிகயைப் பெறலாம். முகவரியைப் பெற்றபின் முதல் ம்¤ன்னஞ்சல் நீங்கள் பதிவு செய்து கொண்ட நிறுவத்தில் இருந்து வரும். அதில் தாங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு பதிந்து கொண்டமைக்காகப் பாராட்டு தெரிவிக்கப் பெற்று இருக்கும்.

இம்மின்னஞ்சல் முகவரியும் ஒரு மதிப்பாக தற்போது கருதப் படுகிறது. ஜீமெயில் வைத்திருப்பவர்களின் மதிப்பு தற்போது சற்று கூடுதலாக மதிக்கப்படுகிறது. எனவே மின்னஞ்சல் முகவரி என்பது வெறும் முகவரி மட்டுமல்ல. அதில் ஒவ்வொருவரின் மதிப்பும் உள்ளது என்பதையும் கருத்தில் வைத்துக் கொள்ளவேண்டி உள்ளது.

மின்னஞ்சல் அனுப்புவோம் மின்னஞ்சல்கள் மிகவும் பயன்படக் கூடியவை. ஆனால் மின்னஞ்சல் உடைய நண்பர்களிடத்தில் மட்டுமே இவை பயன்படும் என்பது ஒரு குறை. இருப்பினும் இதில் உள்ள நிறைகள் கருதி நம் நண்பர்களை மின்னஞ்சல் உருவாக்கிக் கொள்ளத் தூண்டுவோம்.

இவ்வாறு தூண்டி மின்னஞ்சல் முகவரி உள்ள நண்பர்களை உலக அளவில் நாம் பெற்றுக் கொண்டோம் என்று வைத்துக் கொள்வோம். அதன்பின் மின்னஞ்சல்களை நாள்தோறும் அனுப்பிக் கொண்டே இருக்கலாம்.

மின்னஞ்சல் பகுதிக்கு முகவரி, கடவுச் சொல் இவற்றைத் தந்து அதன்பின் செல்லவேண்டும். இது ஒவ்வொரு முறையும் செய்யவேண்டிய செயல். அதுபோல் மின்னஞ்சல் பயன்பாடு முடிந்தபின் அதில் இருந்து முற்றிலும் வெளிவந்துவிடவேண்டும். அதற்கு லாக்அவுட் ( logout) என்ற அமைப்பு உதவி புரியும்.

பொதுவான இணைய மையங்களில் நாம் மின்னஞ்சல்களைத் திறந்து பார்க்கும்போது இந்த லாக்அவுட் முறையைக் காட்டாயம் பின்பற்றவேண்டும். ஏனெனில் அவ்வாறு லாக்அவுட் ஆகாமல் வெளியேறினால் அடுத்துப் பயன்படுத்தும் பயன்படுத்துநர் நம் மின்னஞ்சலில் நுழைந்து செயல்புரிய வாய்ப்பு ஏற்பட்டுவிடும். எனவே ஒவ்வொரு முறையும் முழு வெளியேற்றம் செய்து கொள்வது சிறப்பானது. நல்லது.

மின்னஞ்சலை அனுப்ப முதலில் செய்ய வேண்டியது அதற்கான அமைப்பைத் தேர்தல்¢ ஆகும். ஹாட்மெயி¢லில் இதற்காக நியூ மெயில் என்ற அமைப்பு உண்டு. யாஹ¨வில் இதற்காக கம்போஸ் என்ற அமைப்பு உண்டு. இவற்றைச் சொடுக்கினால் சிறிதுநேரத்தில் இன்னொரு சன்னல் திறக்கும்.

இந்த சன்னலில் பெரும்பாலும் நான்கு அல்லது மூன்று பகுதிகள் இருக்கும். அவற்றி¢ல் மிக முக்கியமான பகுதி பெறுபவரின் முகவரியைத் தரக் கூறும் ‘‘ to ’’ என்ற பகுதிதான். இதில் பெறுபவரின் மின்னஞ்சல் முகவரியைத் தரவேண்டும். அதன்பின் பொருள் ( subject), நகல் ( cc- carbon copy) என்பனவற்றை நிரப்ப வேண்டும். பொருள் என்ற இடத்தில் கடிதத்தின் பொருளைக் குறிப்பிடவேண்டும். நகல் என்ற இடத்தில் இந்த மடலின் நகல் மற்ற யார் யாருக்கு அனுப்ப வேண்டும் எனக் குறிப்பிட்டால் அந்த அந்த ஆட்களுக்கு அது சென்று சேர்ந்துவிடும். பெறுபர் முகவரி, நகல் முகவரி முதலானவை ஒன்றுக்கு மேற்பட்டுப் பலவாக அமையலாம். அவ்வாறு அமைக்கும் போது தொடர்குறியீட்டை (கமா அதாவது , ) என்பதை மட்டும் இட்டால் போதுமானது.அதன்பின் கடிதத்தின் உடல் பகுதிக்கு வரவேண்டும். இதில் தட்டச்சு செய்து செய்தியைத் தெரிவிக்கலாம். இப்பகுதியில் வண்ணங்கள், எழுத்துவடிவங்கள் மாற்றிக் கொள்ள வாய்ப்பு உண்டு. இவ்வகையில் வண்ணங்கள், எழுத்துகள் மாற்றி வடிவமைக்கும்போது கடிதம் அழகாக இருக்கும். ஆனாலும் இதில் ஓரளவு நல்ல வண்ணங்களையும், கண்களை உறுத்தாத வடிவங்களையும் பயன்படுத்துவது நல்லது.

இதன்பின் ஏதேனம் புகைப்படங்களை இதனுடன் இணைத்து அனுப்பவோ, அல்லது கோப்புகளை இணைத்து அனுப்பவோ வழிகள் உண்டு. பெறுதல் முகவரிக்குக் கீழே இந்த வசதி பெரும்பாலும் தரப் பெற்றிருக்கும். அட்டாச்மெண்ட் (attachment) என்ற பிரிவில் அடங்கும் இதைச் சொடுக்கினால் மற்றொரு சன்னல் திறக்கும். இதனுள் படங்கள் அல்லது கோப்பு இருக்கும் பகுதிகளைத் தேர்ந்து பொருத்தவேண்டும். இதற்கு பிரவுஸ் ( brows) என்ற தொடர்¢பு பயன்படும். இதனுள் ஒன்றுக்கு மேற்பட்ட படங்களை, கோப்புகளைச் சேர்க்க முடியும். படங்களைப் பெரும்பாலும் ஜேபிஜி அமைப்புகளாக வைத்துக் கொண்டால் விரைவில் வலையில் ஏறும்.

இதன்பின் சென்ட்( send) என்ற பிரிவைச் சொடுக்கினால் மின்னஞ்சல் செல்ல ஆரம்பிக்கும். சென்று சேர்ந்ததும் செய்தி அனுப்பப் பட்டது என்ற குறிப்பு வரும் சன்னல் தோன்றும். செய்தி சென்று சேர்ந்தது இப்போது உறுதியாகிவிட்டது.

இதன்பின் செய்தி அனுப்பப்பட்ட முகவரிகளை நாம் முகவரிகள் என்ற பிரிவில் இணைத்துக் கொள்ளமுடியும். அப்படி இணைத்துக் கொள்வதன் மூலம் நாம் நமக்கான ஒரு முகவரிக் கோப்பை உருவாக்கிக் கொள்ளலாம். இதன்பின் முகவரிப் பக்கத்தில் ஏதேனும் ஒரு எழுத்தைச் சொடுக்கியதும் அந்த எழுத்தில் ஆரம்பமாகும் முகவரிகளைக் கண்டு அவற்றில் தே¬வாயனதைச் சொடுக்கி நாம் முகவரியை இறக்கம் செய்து கொள்ளலாம்.
சில சிறப்பு அனுப்புதல்கள் பிறந்தநாள், மணநாள் அல்லது இதுபோன்ற குறிப்பிடத்தக்க நாள்களில் வாழ்த்து தெரிவிக்க சில சிறப்பு மின்னஞ்சல்கள் உள்ளன. இவற்றிற்கு வாழ்த்து அட்டைகள்( Greeeting card) என்று பெயர். இந்த மின்னட்டைகளை பல நிறுவனங்கள் இலவசமாக அளிக்¢கின்றன. இவற்றைத் தேர்ந்து செய்திகளை எழுதி அனுப்பலாம். இவை அனுப்பும் போது எந்த நாளில் அனுப்பவேண்டும் என்று ஒரு வாய்ப்பு கேட்கப் பெற்றிருக்கும். அதில் குறிப்பிட்ட நாளைச் சுட்டி அனுப்பினால் குறிப்பிட்ட அந்த நாளில் சென்று சேர்பவருக்கு அந்த மின்னஞ்சல் கிடைக்கும். இது ஒரு சிறப்ப அனுப்புதலாகும்.

இதன்மூலம் நம் மறதி தவிர்க்கப் படுகிறது. என்றைக்கு நல்ல நாளோ அன்றைக்கு நாம் வாழ்த்து சொல்லமுடிகிறது.

மின்னஞ்சலைப் பெறுபோம், பார்ப்போம் மின்னஞ்சல் முகவரியைப் பெற்றாகிவிட்டது. அதனை மின்னஞ்சல் உள்ள நண்பர்கள் அனைவருக்கும் தெரிவித்து மடல்கள் அனுப்பிவிட்டோம். அவர்களும் திரும்ப நம்முடன் தொடர்பு கொள்கிறார்கள். அந்த மடல்களை எவ்வாறு பார்வையிடுவது? அதுவும் மிக எளிதான முறையே.

மின்னஞ்சலைத் திறக்க தக்க ஏற்பாடுகளைச் செய்த கொள்ளவேண்டும். அதாவது முகவரியை இட்டு கடவுச் சொல்லைத் தந்து மின்னஞ்சல் கணக்கில் உள்நுழைந்து கொள்ளவேண்டும். உள் நுழைந்தபின் யாஹ¨ வாக இருந்தால் இன்பாக்ஸ் என்ற தொடர்பில் நமக்கு வந்த மடல்களின் எண்ணிக்கையை அது காட்டும். அந்த எண்ணிக்கையில் அழுத்தினால் வந்த மடல்களின் விவரம் அனுப்பியவர்¢ பெயர், பொருள் ஆகியவற்றை வரிசைபடக் காட்டும். இவற்றில் சுட்டியை வைத்து அழுத்த மடலைப் பார்க்கலாம். படிக்கலாம்.

ஹாட்மெயிலாக இருந்தால் மெயில் என்ற இணைப்பில் இது தெரியவரும். இதனுள் இன்னொரு கூடுதல் வசதியும் உண்டு. அதாவது நமக்குத் தெரிந்தவர் கடிதங்கள், ஒட்டு மொத்தக் கடிதங்கள் என்ற சில பிரிவுகள் இதனுள் உண்டு. அதில் எது நமக்கு வேண்டுமோ அதை அழுத்தி¢ நாம் வேண்டும் கடிதங்களைப் படிக்கலாம்.

படித்த கடிதங்களுக்கு உடன் பதில் தரவும் வாய்ப்பு உண்டு. அது திருப்பி அனுப்பல் ( reply) என்ற இணைப்பில் வழியாகக் கிடைக்கிறது. இதனைத் தொடர்பு படுத்தினால் முன்னர் சொன்ன கடித வரைவு சன்னல் போன்ற ஒன்றே திறக்கும். இதில் பெறுபவரது முகவரி தானகவே இடம் பெற்றிருக்கும். இது ஒரு கூடுதல் வசதியாகும்.

வந்த மடல்கள் சொந்த மடல்களா? மடல்கள் பல நம் முகவரிக்கு வந்து கொண்டே இருக்கும். இது நல்லதும் கூட. கெட்டதும் கூட. ஏனெனில் சில மடல்களில் கணினியின் உள்கட்டமைப்பை அழித்துவிடக் கூடிய வைரஸ்கள் இருக்கலாம். இதனால் எல்லா மடல்களையும் பிரித்துப் பார்ப்பது நமக்குத் தேவையற்ற வேலையாகிவிடும்.

எனவே அவற்றைத் தவிர்க்கப் பல வழிகள் உண்டு. யாஹ¨ என்ற அமைப்பில் ஸ்பாம் ( spam) என்ற அமைப்பு உண்டு. இதில் குறிப்பிட்ட மின்னஞ்சல்களைக் குறியிட்டுச் சேர்த்துவிட்டால் அவை மீண்டும் நமக்குத் தெரியவராது.

தேவையற்ற மடல்களை அவ்வப்போது அழித்துவிடுவது நல்லது. அதற்கு மடல்களைக் குறியிட்டு டெலிட் ( delete ) என்ற தொடர்பை அழுத்தி நீக்கிவிடலாம்.

எனவே வந்த மடல்கள் நமக்குச் சொந்தமானவையாக இருந்தால் பிரிக்கலாம். சொந்தமடல்களாக இல்லாத நிலையில் நீக்கிவிடலாம்.
இவைபோன்ற இன்னும் பல பயன்கள் உள்ளன. தேவையான சில மட்டுமே இங்கு விரித்துரைக்கப் பெற்றுள்ளன. மற்றவை நீங்கள் உள்ளே சென்று தேடிப் பெறலாம்.

மின்னஞ்சல்களின் வேறுபயன்பாடுகள் மின்னஞ்சல் முகவரிகள் கணினி வழி உரையாடலுக்கும், சில தளங்களில் பதிந்து கொள்வதற்கும் பயன்படுகின்றன. இவ்வகையில் மின்னஞ்சல் என்பது இணைய உலகில் பாதி இடத்தை வகிக்கிறது என்று கூறினால் மிகையாகாது.

தமிழில் மின்னஞ்சல்கள் தற்போது தமி¢ழில் மின்னஞ்சல்கள் அனுப்பும் முறை வந்துவிட்டது. மேற்கூறிய முறைப்படி தமி¢ழில் மின்னஞ்சல் அனுப்பலாம். அவ்வாறு அனுப்பும் போது தமிழ் எழுத்துருக்களையும் இணைப்பாக இணைத்து அனுப்ப வேண்டும். இதன்மூலம்¢ பெறுபவர் அந்த எழுத்துருவைப் பெற்றுப்பின் அதனை வாசிப்பார்.

வேறு ஒருமுறையிலும் தமிழ் அஞ்சல் அனுப்பலாம். இதற்க முரசு அஞ்சல் என்ற தனி அமைப்பே உள்ளது. இது சிங்கப்பூர் தமிழ் நண்பர்களால் உருவாக்கப்பட்டது. இதற்கு முரசு அஞ்சல் அனுப்புவரிடத்தி¢லும் பெறுபவரிடத்திலும்¢ இருக்கவேண்டும். அவ்வாறு இல்லை என்றாலும் இலவசமாக இணையதளம் வழியாகப் பதிவிறக்கம் செய்து கொள்ள வாய்ப்பு தரப் பெற்றுள்ளது.

தற்போது யுனிகோட் என்ற எழுத்து முறை பரவலாக்கம் பெற்றுள்ளது. இதன்வழியாக தமிழ் அனைத்து கணினிகளில் சிப் எனப்படும் உயிர்ப்பகுதிகளில் சேமிக்கப் பெற்றுள்ளது. இவ்வகை எழுத்துருக்களைப் பயன்படுத்தி அனுப்பப்படும் கடிதங்கள் தமிழில் படிக்கத்தக்கனவாக உள்ளன.
எனவே பைசா செலவில்லாமல் கடிதம் அனுப்பவும் கடிதம் பெறவும் முடியும் என்பது உண்மைதானே...

கருத்துகள் இல்லை: