செவ்வாய், மார்ச் 07, 2006

March 8 - is the simbal for female growth?

மார்ச் 8
இது பெண்களின் தினம்
இந்தத் தினத்தில் எப்பொழுதும் கேட்கப் படுகிற ஒரு கேள்வி. பெண்களுக்கு என ஒரே ஒரு தினம் மட்டும் தானா ? மற்ற தினங்கள் எல்லாம் ஆண்களுக்கானதுதானே! என்பதுதான்.

இது பெண்கள் கேட்கிற கேள்வி! ஆனால் ஆண்கள் இதனைச் சற்று மாற்றி ஒரு கேள்வி கேட்பார்கள். இந்த ஒரு நாளவது பெண்கள் தினம் என்று கொண்டாடப் படுகிறதே! எங்களுக்கு என்று ஒரு தினம்கூட கொண்டாடப் படுவதில்லையே என்பது

எது எப்படி இருந்தாலும் பெண்கள் தினம் கொண்டாடப்படுவதன் விளைவுகள் பல. சில பெண்கள் கல்லூரிகளில் மகளிர் தினக் கருத்தரங்குகள் கொண்டாடப்படுகின்றன. (சென்னை எத்திராஜ் மகளிர் கல்லூரியில் பெண்கவிஞர்கள் பலர் பங்கேற்கும் ஒரு கூட்டம் மார்ச் 8 அன்று நடைபெறுவதாக தினமணி வழியாக அறிந்தேன். போக ஆசை. ஆனால் ஆண்களை உள்ளே விடுவார்களா என்ற அச்சம் தலையெடுப்பதன் வாயிலாகச் செல்ல மனமில்லை.)

எது எப்படியானாலும் ஒரு ஐம்பது ஆண்டுகால வரலாற்றில் பெண்கள் பல அடிதூரம் வளர்ந்திருக்கிறார்கள். கல்வி அளவில் அவர்கள் எட்டியுள்ள தூரம் அதிகம் எனத் தௌ¤வாகத் தெரிகிறது. வேலைவாய்ப்பில் அதே வெற்றி தொடர்கிறது. வாகனங்கள் ஓட்டுவது, வெகுஐன ஊடகங்களில் பெண் அறிவிப்பாளர்கள் பெண் பத்திரிக்கையாளர்கள் இவர்கள் தனியாகக் கண்டறியப்படுகின்றனர். மகளிர் இதழ்கள் மகளிர் நிகழ்ச்சிகள் மகளிர்மட்டும் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் இவை வளர்ந்து வருகின்றன.
ஓரளவிற்குப் பெண்கள் வளர்ச்சி பெற்றுள்ளார்கள். ஆனால் சமூகக் கட்டுப்பாடுகள், சமூகமதிப்புகள் இவற்றில் அவர்கள் நிலை இன்னமும் விடுதலை பெறவில்லை என்பது என் கருத்து, இதில் மாறுதல் இருந்தால் வேறுபாடு இருந்தால் தெரிவுயுங்கள்,

ஆனால் மகளிர் நிகழ்ச்சிகள் என்று புது அவதாரம் எடுத்திருக்கும் மகளிர்க்கான நிகழ்ச்சிகளின் வாசகர்கள் யார். இதன் இயக்குநர் யார் இதன் காட்சித் தொகுப்பாளர்யார் இவர்கள் எல்லாம் பெண்களா? பெண்களின் நிகழ்ச்சிகள் என்று நடத்தப்படும் நிகழ்ச்சிகள் ஏன் ஆண்களும் பார்க்க ஏற்ற வகையில் ஒளிபரப்பப் படுகின்றன. இவை நீளும் கேள்விகள்
சரி மகளிர்தினம் கொண்டாடுவோம். என்மனைவிக்கு வாழ்த்து சொல்ல ஒரு நாள் கிடைத்தது. வாசிக்க ஒரு பெண் படைப்பைத் தேடுகிறேன். இவ்வளவும் மகளிர் தினத்தின் விளைவுகள்,,,,,

பெண் வளர்ச்சிக்கான குறியீடா மகளிர்தினம்

2 கருத்துகள்:

Chandravathanaa சொன்னது…

http://pennkal.blogspot.com/2005/03/blog-post.html

palaniappan சொன்னது…

thank u for ur link notice
palaniappan