புதன், மார்ச் 08, 2006

பெண்கவி 1

மகளிர் தினத்திற்காக சில மகளிர் கவிதைகளை இங்கு உங்களுக்காகத் தர உள்ளேன். அவற்றில் ஒன்று. அவற்றைக் காணுங்கள், படியுங்கள், அதன் சிறப்பை உணருங்கள், முதல்கவிதை பழைய இலக்கியமான குறுந்தொகையில் இருந்து அள்ளுர் நன்முல்லையார் என்பவர் எழுதிய ஒரு பாடல், பாடலுக்குச் செல்லும் முன் அதன் பொருளை நீங்கள் அறியுங்கள்,,,,,
தலைவி ஒருத்தியின் பாடல் இது. தலைவியோடு தலைவன் சிறிது காலம் குடும்பம் நடத்தி வந்தான். அதன்பின் ஏதோ ஒரு காரணமாகத் தலைவன் வேறு ஒரு பெண்ணை நாடிச் சென்றுவிட்டான். நாடிச் சென்ற அவன் மீண்டும் தன் வீட்டிற்கு வருகிறான். ஆனால் தலைவி அவனை வரவேற்காமல் முகம் கோணுகிறாள். இதைப்பார்த்த பக்கத்துவீட்டுத்தோழி நீ இவ்வாறு செய்யக்கூடாது. கணவனிடத்தில் அன்பு செய்ய வேண்டும் என்று கூறுகிறாள். ஆனால் தலைவி என்னைவிட்டு அவர் சென்றுவிட்டார். சென்றுவிட்ட காலங்களில் என்அழகை ருசித்துப் பார்க்க அவர் இல்லை. என் நலம் அவர் இல்லாததால் ஊர் முழுவதும் சிரிப்பாய் சிரித்துவிட்டது. இருந்தாலும் அழகு போய் குடும்ப நலம் போய் என் உயிர் போகின்ற சூழலில் அது எவ்வாறு போகின்றது என்பதைக் காணுவதற்காக அவர் வந்துள்ளாரா? அவரைப் போகச் சொல் வேண்டாம் அவர் இங்க வரவேண்டாம் இந்த குடும்பத்தை வளர்க்க அவர் வரவேண்டாம்
அவர் நமக்கு அன்னையும் தந்தையும் போன்றவர். அவரிடம் கணவருக்கான தகுதி இல்லை. காதல் இல்லை. ஒரு குழந்தைக்கு அம்மாவிடம் இருக்கும் அப்பாவிடம் இருக்கும் பிள்ளை அன்பு இருக்கிறதே தவிர மனைவி மீது கணவன் வைத்திருக்கும் காதல் அன்பு காமவின்பம் இல்லை. அவரிடம் சண்டை போட்டும் என்ன,,,,, அந்த சண்டையை நீ தீர்த்து வைத்தும் என்ன,,,,,,,,,,, வரச்சொல் அவர் அப்பாவாக என்பிள்ளைகளுக்கு இருக்கட்டும். இந்தக் குடும்பத்தில் பிள்ளைகளுக்கு நான் அம்மாவாக மட்டும் இருந்து இந்த வாழ்க்கை நிறைவு பெறட்டும்.
இந்தக்கவிதையில் மற்றொரு பெண்ணைத் தொட்டவன் அனுபவித்தவன் தன்னை அவளோடு ஒப்பு வைத்தோ அவளை என்னோடு ஒப்பு வைத்தோ அவன் அனுபவித்திருக்கக் கூடும். அந்த அனுபவிப்பில் மனதில் ஒருத்தியும் உடலளவில் ஒருத்தியும் அவளோடு செயல் பரிந்திருப்பார்கள் இதனால் சிந்தையால் ஒரு மாதையும் உடலால் ஒரு மாதையும் தொடும் சூழலை உண்டாக்கிய தலைவன் தவறு செய்தவனாகிறான். இவன் தவறை மெல்லக் காட்டும் பாட்டு நேயம் பெண்களுடையது.


இதோ இப்போது உங்களுக்குப் பாடல்

நன்னலம் தொலைய நலம் மிகச் சாஅய்

இன்னுயிர்க் கழியினும் உரையல் அவர்நமக்கு

அன்னையும் அத்தனும் அல்லரோ தோழி

புலவியது எவனோ அன்பிலங்கடையே

கருத்துகள் இல்லை: