குற்றாலக் குறவஞ்சியும் திருமுறைப் பெருமையும்
முனைவர் மு. பழனியப்பன்
குற்றாலக் குறவஞ்சி படிப்பவரைக் கவரும் சிற்றிலக்கியம் ஆகும். இச்சிற்றிலக்கியம் குற்றாலநாதரைச் சிறப்பிக்கும் வகையில் வசந்த வல்லி, குறவன், குறத்தி ஆகிய பாத்திரங்களைக் கொண்டுப் படைக்கப் பெற்றுள்ளது. இப்படைப்பினுள் சைவ சமயத்தின் நிலைப்பாட்டினை உயர்த்திக் காட்ட, நிலை நிறுத்திக்காட்டப் பல முயற்சிகளை இதனைப் படைத்த திரகூடராசப்பக் கவிராயர் மேற்கொண்டுள்ளார்.
பன்னிரு திருமுறைகள் சைவ சமயத்தின் அழியா,அழிக்க முடியாச் சொத்துக்கள். அவற்றை வரைந்த தமிழ்த் தொண்டர்தம் தொண்டுகள் என்றும் நினைக்கத்தக்கன. இவர்களைக் காலம் காலமாக மக்கள் நினைந்துப் போற்றி வந்துள்ளனர். மேலும் அவர்கள் பாடிய இறைப்பனுவல்களையும் மக்கள் காலம் காலமாகப் பாடி வந்துள்ளனர். அவ்வழியில் இக்காலச் சைவ உலகமும் சென்று கொண்டிருப்பது இன்னும் பல நூற்றhண்டுகளுக்கு இறைத்தொண்டர்கள் பற்றிய செய்திகள், அவர்கள் பாடிய இறைப்பனுவல்கள் நடைமுறையில் இருக்கும் என்பதான நம்பிக்கையை வலுவூட்டுவதாக உள்ளது.
குற்றாலக் குறவஞ்சியின் ஆசிரியர் திரிகூட ராசப்பக் கவிராயர் பல இடங்களில் திருமுறை பாடிய இறைத் தொண்டர்களின் பெருமையைப் போற்றியுள்ளார். இவரது இப்போற்றுதல்கள் பன்னிரு திருமுறை சிற்றிலக்கிய காலத்தில் ஏற்றம் பெற்றிருந்தது என்பதைத் தெளிவு படுத்து்வதாக உள்ளது. மேலும் சிற்றிலக்கிய காலத்தில் திருமுறைகள் ஓதப்பட்டு வந்தன என்பதனைக் காட்டுவதாகவும் உள்ளது. அவ்வகையில் இக்கட்டுரை குற்றாலக் குறவஞ்சியில் காணப்படும் திருமுறை வாணர்கள் பற்றியும் திருமுறைச் செய்திகள் பற்றியும் எடுத்துக் காட்டுவதாக உள்ளது.
குற்றாலக் குறவஹ்சியில் பல இடங்களில் சைவச் செய்திகளும், பன்னிரு திருமுறைகளும் எடுத்தாளப் பெற்றுள்ளன. கடவுள் வாழ்த்தில் திரிகூடராசப்பக் கவிராயர் தேவார மூவர் முதலிகளுக்கும், மாணிக்கவாசகருக்கும் தனித்தனியே வணக்கம் பாடியுள்ளார். இவர் காலத்தில் நால்வர் என்ற அழைப்பு முறை இல்லை போலும். ஏனெனில் இவர் இரண்டு பாடல்களில் தனித்தனியாக மூவர் முதலிகளையும், மாணிக்கவாசகரையும் குறிப்பிட்டுள்ளளார்.
தலையிலே ஆறிருக்க மாமிக் காகத்
தாங்குகடல் ஏழழைத்த திருக்குற்றாலநாதர்
சிலையிலே தடித்ததடம் புயத்தை வாழ்த்திச்
செழித்த குற வஞ்சி நாடகத்தைப்பாட
அலையிலே மலை மிதக்க ஏறினானும்
அத்தியிலே பூவை அந்நாள் அழைப்பித்தானும்
கலையிலே கிடந்த பொருள் ஆற்றிற் போட்டு
கன குளத்தில் எடுத்தானும் காப்பதாமே (1. 5)
என்ற இப்பாடலில் இறைவன் ஏழுகடல் அழைத்தத் திருவிளையாடலும், அப்பர், ஞானசம்பந்தர், சுந்தரர் ஆகியோர் தம் வாழ்க்கைக் குறிப்புகளும் இடம் பெறச் செய்யப் பெற்றுள்ளன.
அப்பர் அலைகடலில் தூக்கி வீசப்பெற்ற போது அவர் கல்லையே தெப்பமாகக் கொண்டுக் கரையேறிய செய்தி, எலும்பு மட்டுமே இருந்த பூம்பாவையின் மிச்சத்தைக் கொண்டு அப்பெண்ணை உருவாக்கிய ஞானசம்பந்தரின் புதுமை, மணிமுத்தாற்றில் இட்ட பொன்னைத் திருவாரூர்க் குளத்தில் பெற்ற சுந்தரரின் தோழமை முதலியன இப்பாடலில் காட்டப் பெற்றுள்ளன. மூவர் முதலிகளின் சிறப்பான முச்செய்திகள் இப்பாடலில் இடம் பெற்றுள்ளன.
இதற்கடுத்த பாடலில் அகத்தியரையும், மாணிக்கவாசகரையும் பணிந்து போற்றுகின்றார் திரிகூடராசப்பக் கவிராயர்.
தமிழுரைத்த முனியைப் பாடி
இத்தரையில் ஆத்துமம் விட்டிறக்கும் நாள்
சிலேட்டுமம் வந்து ஏறாவண்ணம்
பித்தனடித் துணை சேர்ந்த வாதவூ
ரணடிகள் பேணுவோமே. (2.6)
என்ற இப்பாடலில் வாதவூரன் என்று மாணிக்கவாசகர் அவரின் பிறந்த ஊர்ச் சார்பாகக் குறிக்கப் பெற்றுள்ளார். இப்பாடலில் வாதம் என்பதனை நோயாகவும் கொண்டு பொருள் பெற இயலும். அதாவது இறுதிநாளில் வாதம், பித்தம், சிலேட்டுமம் வந்துப் பற்றிக் கொள்ளும். அவை ஏறாவண்ணம் பித்தனை நாடியவர் வாதவூர் சார்ந்த மாணிக்கவாசகர் என்ற குறிப்பு இங்கு நோக்கத் தக்கது. மேலும் இதனுள் அகத்திய முனிவரும் வணங்கப் பெற்றுள்ளார். இவரை அகத்தியராக அல்லாமல் திருமூலராகவும் கொள்ள இயலும்
நால்வர் பற்றிய செய்திகள் இப்பனுவலில் கடவுள் வாழ்த்துக்களாக இடம் பெறச் செய்யப் பெற்றுள்ளமை கொண்டு அத்தொண்டர்கள் மீது திரிகூடராசப்பக் கவிராயர் கொண்டிருந்த மதிப்பு தெரியவருகிறது. கடவுளர்களுக்கு வணக்கம் என்ற நடைமுறை இயல்பானது. ஆனால் தொண்டர்களையும் கடவுளர்களுக்கு ஈடாக வணங்கும் இவரின் நடைமுறை இவருக்கும் பெருமை சேர்ப்பதாக உள்ளது. மேலும் தொண்டர்களையும் பெருமைப்படுத்துவதாக உள்ளது.
மற்றொரு இடத்தில் வசந்த வல்லி தூது விடுகிறாள். அத்தூதினைத் தக்க சமயம் பார்த்துச் சொல்லப் பாங்கியை அவள் வேண்டுகிறhள். அப்போது தக்க சமயம் எது என அவள் மொழிகிறாள். அப்போது குற்றால நாதர்க்கு நடைபெறும் நாள் வழிபாடுகளும்,சிறப்பு வழிபாடுகளும் வசந்தவல்லியால் கோடிட்டுக் காட்டப் பெற்றுள்ளன. எல்லா வழிபாடுகளின் போதும் மூவர் தேவராம் ஓதப்பெற்றுள்ளது .
நாலுமறைப் பழம் பாட்டும் மு்வர் சொன்ன திருப்பாட்டும்
நாலுகவிப்புலவர் புதுப்பாட்டும் சகியே
நீலகண்டர் குற்றாலர் கொண்டருளும் நிறைகொலுவில்
நீக்கமிலை எல்லார்க்கும் பொதுக்காண் சகியே(3.30)
என்று குற்றாலநாதர் முன்னிலையில் வேதங்களும், திருமுறைகளும் பேதமில்லாமல் ஒன்றாய் நின்ற செய்தி காட்டப் பெறுகின்றது.
மேலும் இதே பாடலில் தொடர்ந்து முப்பொழுதும் திருமேனி தீண்டுவார் பற்றிய குறிப்பும் காணப்படுகிறது. ளமுப்பொழுதும் திருமேனி தீண்டவார் வந்து நின்று முயற்சி செயும் திருவனந்தல் கூடிச் சகியே என்பதே அக்குறிப்பு ஆகும். இக்குறிப்பு ஏழாம் திருமுறை அல்லது பதினொன்றாம் திருமுறை அல்லது பன்னிரண்டாம் திருமுறை தந்தக் குறிப்பாகக் கூட இருக்க முடியும். ஏனெனில் சுந்தரர் இதனைத் தன் பாடலிலும், நம்பியாண்டார் நம்பி தன் பாடலிலும், சேக்கிழார் தன் பாடலிலும் கையாண்டுள்ளனர் என்பதை எண்ணும்போது கவிராயருக்கு இருந்த திருமுறை மதிப்பு மேம்பட்டுத் தோன்றுகிறது.
இறைவன் உலா வரும்போது திருமுறைகள் பாடப்படுவதனைக் கற்பனை கலந்துக் கவிராயர் பாடியுள்ளார். முரசுகள், உடுக்கைகள் போன்ற இசைக்கருவிகள் முழுங்கும் ஓசையால் எட்டுதிசை யானைகள் தன் காதுகளைப் பொத்திக் கொண்டன. பொத்திய அக்காதுகளைத் தொண்டர்கள் பாடிய தேவார இசை திறக்கச் செய்தது என்று கற்பனை கலந்துப் பாடலைப் படைத்துள்ளார் திரிகூடராசப்பக் கவிராயர்.
இடியின் முழக்கொடு படரும் முகிலென
யானை மேற்கன பேரி முழக்கம்
துடியின் முழக்கமும் பரந்து திசைக்கரி
துதிக்கை யாற்செவி புதைக்கவே
அடியர் முழக்கிய திருப்பல்லாண்டிசை
அடைந்த செவிகளும் துறக்க மூவர்கள்
வடி செய் தமிழ்த்திருமுறைகள் ஒரு புறம்
மறைகள் ஒருபுறம் வழங்கவே
என்ற இப்பாடலில் சேந்தனார் பாடிய திருப்பல்லாண்டும் காட்டப் பெற்றுள்ளது. தமிழ்த்திருமுறைகள் என்று திருமுறைகளும் சுட்டப் பெற்றுள்ளன. மேலும் மறைகளுக்குச் சமமாகத் திருமுறைகளும் அக்காலத்தில் மதிக்கப் பெற்றமையும் காட்டப் பெற்றுள்ளது.
குறவன் பாத்திரமும் திருமுறை அறிந்த பாத்திரமாக வடிக்கப் பெற்றுள்ளது. அவன் பறவைகள் பிடிக்க வலை கட்டுகிறான். அவன் விரித்த வலையில் பறவைகள் கூட்டம் கூட்டமாக வந்து் வீழ்கின்றன. இதற்குத் திருமுறை உவமை ஒன்றை எடுத்துக் காட்டியுள்ளார் திரிகூடராசப்பக்கவிராயர்.
கூடலை உள்ளாக்கிச் சைவம் புறம்பாக்கிக்
கூடும் சமணரை நீடு கழுவேற்ற
ஏடேதிர் ஏற்றிய சம்பந்த மு்ர்த்திக்கன்று
இட்ட திருமுத்தின் பந்தல் வந்தால் போல
வெள்ளைப் புறாவும் சகோரமும் ஆந்தையும்
மீன்கொத்திப் புள்ளும் மரங்கொத்திப் பட்சியும்... ( 5. 9)
என்று சம்பந்தப் பெருமானுக்கு முத்துப்பந்தர் வந்ததுபோல பறவைகள் வந்தன என்று உவமை காட்டுகிறார் திரிகூடராசப்பக் கவிராயர். வானத்தில் இருந்து முத்துப்பந்தர் வந்த அதிசயம் இங்கு உவமையாக்கப்பெற்றுள்ளது. முத்துப்பந்தரும் பறவை போன்றே பறந்து வந்திருக்க வேண்டும்.
இவற்றின் மூலம் சிற்றிலக்கியக் காலத்தில் திருமுறைகள் பெற்றிருந்த ஏற்றம் தெரியவருகிறது. மரமெலாம் சிவவடிவம், கிளையெல்லாம் சிவவடிவம், சுளையெல்லாம் சிவவடிவம், வித்தெல்லாம் சிவவடிவம் எனப்பாடிய திரிகூட ராசப்பர் சைவத்தின் பெருமை நிற்க நல்லதொரு இலக்கியமாகக் குற்றhலக்குறவஞ்சியைத் தந்துள்ளார். அதனுள் புதைந்திருக்கும் சிவ உண்மை தேடுவார்க்கு மிக்க பயன் தரும். எண்ணிய எண்ணியாங்குப் பலன் தரும்.
வெள்ளி, மே 30, 2008
சனி, மே 24, 2008
தேயும் தமிழ் நேயம் (இந்நூற்றாண்டின் தமிழ்க்கவலை)
தமிழ் ஒரு மொழி மட்டும் அன்று. அது தமிழ் இனத்தின் அடையாளம். தமிழரின் பண்பாடு,கலை,அரசியல், நாகரீகம் முதலானவற்றின் ஒட்டு மொத்த கூட்டு அடையாளத்தின் பெயர் தமிழ். இந்தக் கூட்டு அடையாளம் பழமையால், செழுமையால், மரபால் உயர்வைத் தமிழர்க்குத் தந்து கொண்டுள்ளது. இதன்மூலம் உலகில் தனித்தன்மையைத் தனித்த அடையாளத்தைத் தமிழர் பெற்று வருகின்றனர். இந்த அடையாளம் என்றைக்கும் நிலைக்க வேண்டும் என்பது அனைத்துத் தமிழ் மக்களின் ஆவல்.
ஆனால் பல தலைமுறைகள் கடந்து காலவெள்ளத்தில் நீந்தி வந்திருக்கும் தமிழ்,இன்னும் நூறு ஆண்டுகளுக்குக் கூட நிலைத்து நிற்காது என்று ஆய்வுகள் தம் முடிவுகளை அறிவிக்கின்றன. தமிழின் தேய்மானம் தொடங்கி விட்டதோ என்ற ஏக்கத்தில் இக்கட்டுரை சில செய்திகளை முன்வைக்கிறது.
மொரிசியஸ், பிஜு தீவுகளில் ஒரு காலத்தில் தமிழர்கள் வாழ்ந்தார்கள். அவர்களோடு தமிழும் இருந்தது. இன்றைக்கு அங்கெல்லாம் தமிழர்களின் பரம்பரையினர் வாழ்கின்றனர். தமிழ் என்ற கூட்டு அடையாளம் கேள்விக்கு உள்ளாகி விட்டது.
இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் போன்ற தமிழ்த் தேசங்களில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிகள், பொருளாதார இருக்கங்கள் இன்னும் எத்தனை ஆண்டுகள் தமிழரை மூச்சு விட வைக்கும் என்ற பெருங்கவலை நாள்தோறும் எழுந்து எழுந்து மெலிவடைய வைக்கின்றது.
தமிழ்நாட்டில் இன்றைக்கு உள்ள குழந்தைகள் தாங்கள் சந்திக்கும் போதெல்லாம் ஆங்கிலத்தில் உரையாடி மகிழ்கிறார்கள். தமிழ் கடினமான பாடங்களுள் ஒன்று என்று சொல்வது அவர்களுக்குப் பெருமையாக இருக்கிறது.
இனத்திற்கு ஏற்பட்டுள்ள இந்நெருக்கடியில் தமிழ் தேயத் தொடங்கி விட்டதாகத் தான் உணர முடிகிறது.
ஒரு தமிழகத் தனியார் தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சி தற்போது நடைபெற்றுவருகிறது. தமிழ்ப் பேசு, தங்கக்காசு என்ற பெயரில் நடக்கிறது அந்நிகழ்ச்சி. தமிழகத்தில் தமிழ் பேசுபவர்கள் எண்ணிக்கையை அதிகமாக்கும் நோக்கில் அமைக்கப் பட்டுள்ள நிகழ்ச்சி இது.
இந்நிகழ்வின் முதல் சுற்று தமிழைத் தவறின்றிப் படிக்க வேண்டும். கொடுக்கப்படும் தமிழ்ப்பகுதி பெரும்பாலும் நாற்பதாண்டு கடந்த புலவர் தம் தமிழ்ப்பகுதி. ஏறக்குறைய தனித்தமிழ்ப்பகுதி. அதனைப் படிப்பதற்குள் தமிழ் மக்கள் படும் பாடு பெரும்பாடு. நடுவராக இருப்பவர் பல தடங்கல்களுக்கு இடையில் இவர் தனக்கான தமிழ்ப்பகுதியைப் படித்து முடித்துவிட்டார் என்பதையே அடிக்கடி சொல்ல நேர்கிறது. இதன்மூலம் என்ன தெரிய வருகிறது. தமிழர்கள் தவறின்றித் தமிழ் படிப்பதைக் கூட தேய்மானத்திற்குக் கொண்டு வந்துவிட்டார்கள் என்பதுதான் தெரிய வருகிறது.
இப்போட்டியின் அடுத்த சுற்றுக்கள் பொருளற்றதாகவே எனக்குப் படுகின்றன. பொருளற்ற ஒரு தொடரைப் பத்து முறை சொல்லச் சொல்லி போட்டியாளரைக் குழந்தையாக்கி வேடிக்கை பார்ப்பது, ஆங்கிலச் சொற்களுக்கு மொழிபெயர்ப்பை வேண்டுவது, உரையாடலில் சில சொற்களைத் திரும்பத் திரும்பச் சொல்லமால் இருப்பது- இவ்வாறு நடைபெறும் இப்போட்டியில் வெற்றி பெற்றவர் தங்கக் காசு பெறுகிறhரே அன்றி தமிழை வளர்த்தாரா, வளர்ப்பாரா என்றால் கவலையே மிஞ்சும்.
மொழி என்பது மக்களின் பயன்பாட்டில் இருக்கும் வரை இறப்பை எட்டுவதில்லை. தமிழ் மொழியைப் பொறுத்த அளவில் தமிழ் மக்களின் பயன்பாட்டில் அது தேய்வு பெற்று வருகிறது என்பதை ஒத்துக் கொள்ள வேண்டி உள்ளது.
பேசும் பேச்சில், திரைப்படப்பாடல்களில் அளவுக்கு அதிகமாக வேற்றுச் சொற்கள் நுழைந்துவிட்டன. அவையன்றித் தமிழ் இனி தனித்து நிற்க இயலாது.
பண்பாட்டில் வேற்றுமைகள் பெருகிவிட்டன. தமிழர்களின் தனித்த பண்பாடு என்று தூக்கிப் பிடித்த விருந்து, விழாக்கள் எல்லாம் தேய ஆரம்பித்துவிட்டன. தமிழரின் கலைகளை வளர்க்க ஆட்கள் இல்லை. தெருக்கூத்து, பொம்மலாட்டம், தோல்பாவைக்கூத்து எல்லாம் தேய்ந்து போய்விட்டன. மானாடி-மயிலாடி அதற்கு தமிழரல்லா நடிகைகள் நடுநாயகமாக வீற்றிருந்து நடத்தும் நிகழ்வுகள் இப்போது தமிழகக் கலைச்சந்தையில் வீதி வீதியாக வலம் வரத் தொடங்கிவிட்டன.
தமிழ் இலக்கிய வகைமைகளில் ஒரு தேக்கம் தொடங்கி விட்டது. புதுப் புதிதாய் என்றைக்கும் இலக்கிய வரவுகளை ஏற்ற தமிழ்த்தாய் தேக்கத்தில் நிற்கிறாள்.கதை என்னும் வடிவம் - சிறுகதை, ஒருபக்கக்கதை, ஒரு நிமிடக்கதை, ஆறுவரிக்கதை அத்தோடு நின்று போய்விட்டது. கவிதை- மரபு, புது, ஐக்கூ, குக்கூ, சென்ரியு இத்தோடு தேங்கிவிட்டது. நாவல், குறுநாவல், பாக்கெட் நாவல் என சுற்றிச் சுற்றி அதே வந்து கொண்டிருக்கிறது. கட்டுரை புதுமையே பெறாமல் பூத்துப் போய்விட்டது.
காலம் காலமாய் தனிப்பாடல்,காப்பியம், காவியம், இனியது, இன்னாதது என்று வளர்ந்து வந்த தமிழ் உரைநடையில், உரைநடையால் சிக்குண்டு வளர வழி தேடிக் கொண்டிருக்கிறது. யாப்பு நிலையில் இனி கவிதை வடிக்க ஆளைத் தேட வேண்டும். அருணகிரிநாதர் சந்தம் எழுத ஆளே இருக்காது. ஏன் படிக்கவே ஆள் இருக்காது. பரணையில் பழைய இலக்கியங்கள் காணாமல் போய்விடும். நூற்றாண்டு காலமாக தமிழில் புதிய வகைமை எதையாவது தோற்றுவித்து இருக்கிறோமோ என்ற கேள்விக்கு எந்த இலக்கியவாதியிடமும் பதில் தற்போது இல்லை.
தமிழை வளர்க்க வேண்டிய அமைப்புகள் தொய்ந்து போய்விட்டன. தமிழகத்தில் அரசு நிறுவிய தமிழ் வளர்ச்சி நிறுவனங்களின் நிலை இன்னும் மேம்படுத்தப் பட வேண்டும்.
தமிழ்ப்பல்கலைக்கழகம் (தஞ்சாவூர்) தமிழ் ஆய்வுகளுக்காக மட்டும் தொடங்கப் பெற்ற நிலை மாறி தற்போது அது அஞ்சல் வழியில் பல படிப்புகளை அறிமுகப்படுத்தி தன் பொருளாதார வளத்தை மேம்படுத்திக் கொள்ள முன்வந்துவிட்டது. தமிழ் வளர்ச்சித் துறை (தமிழக அரசு) கோப்புகளில் தமிழ் ஒப்பம் இருக்கிறதா என்று தன் மாவட்ட அதிகாரிகளை வைத்துக் கொண்டு சரிபார்ப்பதில் தன்நேரத்தைச் செலவு செய்து கொண்டுள்ளது. உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம்(சென்னை) பல புதிய வெளியீடுகளை தான் புதிதாய் இருக்கும் போது செய்தது. அதில் பணிபுரிவோர்கள் தங்களின் ஓய்வூதியத்திற்கே பக்கம் பக்கமாய் எழுதி அதனைப் பெறhமலே ஓய்வு பெற்றுவிட்டார்கள். தமிழ் இணையப் பல்கலைக்கழகம் தன் எழுத்து உரு எது என்பதிலேயே குழப்பத்தை மேற்கொண்டுள்ளது. புதிதாக வந்துள்ள செம்மொழித் தமிழ் தமிழுக்காக முப்பது கோடி என்ற வரேவற்பு வாசகத்தோடு நின்று போய்விட்டது. அது சென்னைக்கு வரவேண்டும் என அதில் வேலை பார்க்கும் மூத்த ஓய்வூதியம் பெறும் தமிழறிஞர்கள் வேண்டுகோள் விடுத்த வண்ணமாக உள்ளனர். அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் தமிழுக்கான இருக்கை, உலகப் பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கை என்று பல கனவுகளைத் தமிழ்ப்படிக்க வரும் மாணவர்களிடம் எடுத்துவிட்ட தமிழாசிரியர்கள் தங்கள் கனவெல்லாம் கால்வாசிகூட நிறைவேறாது என்று ஓய்ந்து போய்விட்டார்கள்.
இனியும் வேண்டாம் இந்தத் தொல்லை என்று தமிழைப் படிக்கவும், தமிழைப் பேசவும், தமிழை எழுதவும் மறக்க முயல்கிறார்கள் தமிழர்கள்- மாணவர்கள். பன்னிரண்டாம் வகுப்பில் இருக்கும் தமிழ் புணர்ச்சி விதிகளை கோனார் குறிப்பேட்டின் மூலமாக மனனம் செய்வதில் அந்த மாணவர்கள் நொந்து போகிறhர்கள். அத்தோடு தீர்க்கப் பெறுகிறது அவர்களின் தமிழ் ஆர்வம். அறிவில் கடைக்கோடியில் எதுவும் கிடைக்காமல் கிடைத்ததைப் படிக்க வரும் மாணவக் கூட்டம் தமிழை- பட்டப்படிப்பு நிலையில் தமிழை வளர்க்க முயல்கிறது.
இதையும் தாண்டி அஞ்சல் வழி தமிழ்ச்சேவையை உடனடியாக நிறுத்தும் ஆணை வரும் நாள் நன்னாள். அதில் படிக்க வருபவர்களின் நோக்கம் பணிமேம்பாடு பெறுவது. ஆசிரியப் பயிற்சி முடித்த இளம் ஆசிரியர்கள் தேர்வது தமிழ்ப்படிப்பைத்தான். ஏனெனில் அதுதான் கடினப்படாமல், பயிற்சி வகுப்பிற்குப் போகாமல் தேர்ச்சி பெற இயலும். இப்படிப் படித்தவர்கள் சில ஆண்டுகளில் தமிழ் ஆசிரியர்கள் ஆகிவிடும் கட்டாயம் வந்துவிடும். இவர்கள் தானும் படிக்காமல் தன்னிடம் படிக்க வரும் மாணவர்களையும் படிப்பிக்காமல் தமிழே தெரியாத உலகிற்கு இவர்களே வழிகாட்டி.
இவ்வாறு தமிழின் துறைதோறும் மலினம் பரவி விட்டது. உழைக்காமல் உணவு உண்ணும் துறையாக- தமிழ் தரம் கெட்டுப் போய்விட்டது.
இந்தக் கவலை விரக்தியால் அல்ல. வீறு கொண்டு தமிழ்ச்சமு்கம் எழ வேண்டும் என்பது கருதியே. இதைச் சொலவதன் மூலம் பல கேள்விக்கு நான் அல்லது என் கட்டுரை உள்ளானால் அதுவே நாளைய தமிழரின் உறக்கம் கலைந்த உன்னத நிலையாகும்.
புதன், மே 07, 2008
சேவல் திருத்துவசம்
சேவல் திருமுருகனின் கொடியாகும். பெரும்பாலும் ஊர்திகளே கொடியாக இருக்கும் நிலையில் திருமாமுருகனுக்குக் கொடி வேறும் ஊர்தி வேறும் ஆயின. சேவல் 'கொக்கு அறுத்த கோமானே' எனத் தன் வாயால் எப்போது முருகப் பெயரை உச்சரிக்கும் பேறு பெற்றது. கொக்கு என்பது மாமரம். அந்த மாமரமாக நின்ற சூரபதுமனை அழித்த கோமான் முருகன். அவ்வாறு அழிக்கும்போது தோன்றியன மயில் வாகனமும், சேவல் கொடியும். இவ்வகையில் தான் தூய்மையான நிலையையும், இறைவனின் திருப் பெயரையும் மறவாமல் கூறிக் கொண்டே இருக்கின்றது சேவல்.
இச்சேவல் கொடியை மையமாக வைத்து அருணகிரிநாதர் சேவல் விருத்தம் பாடியுள்ளார். பதினோரு பாடல்களை உடைய இப்பகுதி பயம் நீக்கும். ஏவல், பில்லி, சூனியம், பேய், பிசாசு முதலியவற்றhல் ஏற்படும் ஏதங்களை விரட்டும் தன்மை வாய்ந்தது. எம பயத்தையும் போக்கும் வல்லமை இதற்கு உள்ளது. இவ்வகையில் தினமும் பாராயணம் செய்ய வேண்டிய நிலையில் பெருமை பெற்றது சேவல் விருத்தம் ஆகும். இதனுள் பல அரிய கருத்துகளைத் தொகுத்து் வைத்துள்ளார் அருணகிரிநாதர்.
மாயை எனும் இருள் வயப்பட்டு உலகம் தூங்குகிறது. இம்மாயையை விரட்டி ஒளியின் வருகையை உலகிற்கு உணர்த்தும் அரிய பணியைச் சேவல் தினந்தோறும் செய்து வருகின்றது. இது நடைமுறை. இந்நடைமுறையைச் சைவ சித்தாந்தக் கருத்துடன் இணைத்து அருணகிரிநாதர் சேவலை வாழ்த்துகிறார்.
உலகில் அநுதினமும் வரும் அடியவர்கள் இடர் அகல உரிய பரகதி தெரியவே உரகமணி என உழலும் இருவினையும் முறைபடவும் இருள்கள் மிடி கெட அருளியே கலகமிடும் அலகைக் குறள் மிகு பணிகள் வலிமையொடு கடினமுற வரில் அவைகளைக் கண்ணைப் பிடுங்கி உடல் தன்னைப் பிளந்து சிற கைக் கொட்டி நின்று ஆடுமாம் (பாடல் .1)
எனச் சேவலின் ஆடலைத் தெரிவிக்கின்றார் அருணகிரிநாதர். இருவினையும் முறைபடவும் இருள்கள் மிடி கெட அருளி நிற்கும் சேவலின் நிலை சித்தாந்த வயப்பட்டதாகும். உலகில் ஒரே இருள்தான் உண்டு. அவ்வாறு இருக்கையில் அருணகிரிநாதல் இருள்கள் என பன்மைப்படுத்திக் கூறுவதன் நோக்கம் என்ன என்றுச் சிந்தித்தால் அது விளங்கும். மாயை, கன்மம், ஆணவம் என்ற இருள்கள் கவிவதன் மூலம் நல்வினை, தீவினை என்ற இரு வினைகள் எழுந்து உயிரை நிலைபெறச் செய்யாது. ஆண்டவனை அடையச் செய்யாது அலைத்துக் கொண்டிருக்கின்றன என்ற கருத்தை உணர்த்துவதற்காகவே அருணகிரிநாதர் இப்பாடலில் இருள்கள் எனக் குறித்துள்ளார்.இவ்விருளைக் கெடுப்பது சேவல் என்று பெருமைப்படுத்தப் படுகிறது.
இச்சேவல் எம பயம் நீக்கும் என மற்றொரு பாடலில் காட்டுகின்றார் அருணகிரிநாதர்.
கரி முரட்டடி வலைக் கயிறு எடுத்து எயிறு பற் களை இறுக்கியும் முறைத்துக் கலகமிட்டு எமன் முன் கரம் உறத்துடரும் அக் காலத்தில் வேலும் மயிலும் குருபரக் குகனும் அப்பொழுதில் நட்புடன் வரக் குரல் ஒலித்து அடியார் இடரைக் குலைத்து முட்ட வருமாம் (பாடல் 3.)
என்று எமன் வருகையில் குரல் தந்து உயிர்களை நற்கதிக்கு அழைத்துச் செல்லும் பெருமை பெற்றதாகச் சேவல் விளணங்குகின்றது.
இச்சேவலை வணங்குவதால் பல நோய்களும் முருகன் அருளால் முகனடியார்களுக்கு ஏற்படாது. ஏற்பட்டாலும் வருத்தாது அவை ஒழியும் என உறுதி பட மற்றொரு பாடலில் அருணகிரிநாதர் காட்டுகின்றார்.
மாறாத முயலகன் வயிற்றுவலி குன்மம் மகோதரம் பெருவியாதி வாத பித்தம் சிலேற்பனம் குட்ட முதலான வல்ல பிணிகளை மாற்றியே சீறாத ஓராறு திருமுகம் மலர்ந்து அடியார் சித்தத்தில் இருக்கும் முருகன் சிலைகள் உருவிட அயிலை விடு குமர குருபரன் சேவல் திருத்துவசமே (பாடல் 7)
என்பதில் முயலக நோய் (காக்காய் வலிப்பு), வயிற்று வலி, குன்மம் (வயிறு உலைச்சல்), மகோதரம் (பெருவயிறு), பெருவியாதி (பால் வினை நோய்கள்) வாதம், பித்தம், சிலேட்டுமம், குட்டம் போன்ற வல்ல பிணிகளை மாற்றும் போக்கினை உடையது முருகப் பெருமானின் அருள். இக்காலத்தில் இப்பாடல் மிகு தேவையான பாடலாகும். ஏனெனில் நோயில்லா மனிதரில் உலகில் இல்லை. எனவே அனைவரும் பாராயணம் செய்ய வேண்டிய பாடல் இது என்பதில் ஐயமில்லை.
இவ்வாறு சேவலை வணங்கினால் ஏற்படும் நன்மைகள் இப்பதிகத்தில் அதிக அளவில் எடுத்துரைக்கப் பெற்றுள்ளன. இச்சேவல் விருத்தத்தில் சம்பந்தர், பிரகலாதன் பற்றிய குறிப்புகளும் அருணகிரிநாதரால் காட்டப்பெற்றுள்ளன.
அரிய கொற்கையன் உடற் கருகும் வெப் பகையை உற் பனம் உரைத்து அதம் மிகவும் ஏதம் அமணரைக் கழுவில் வைத்தவரும் மெய்ப்பொடி தரித்து அவனி மெய்த்திட அருளதார் சிரபுரத்து அவதரித்து அமுதத் தினமணிச் சிவிகை பெற்று இனிய தமிழைச் சிவன் நயப்புற விரித்து உரை செய் விற்பனன் இகல் சேவல் திருத்துவசமே (பாடல்.3)
என்ற பாடலில் ஞான சம்பந்தப் பெருமான் சிரபுரத்தில் பிறந்த நிலை, பாண்டியனின் வெப்பு நோய் தீர்த்த வரலாறு, சிவிகை பெற்ற அருள் செயல், சிவன் நயப்புற தமிழ் பாடியமை ஆகியன நிகழ்வுகள் தொட்டுக் காட்டப் பெற்றுள்ளன. திருநீற்றுப் பதிகம் என்ற சொல் மாலையால் நோய் நீங்கிய தன்மை போல சேவல் விருத்தப் பாடல்களைப் பாடுவோருக்கும் நோய் நீங்கும் என்ற அடிப்படையில் இவற்றை இவ்விருத்தத்தில் அருணகிரிநாதர் கையாண்டிருக்க வேண்டும். எவ்வகை ஆயினும் சம்பந்தப் பெருமான் குழந்தையாக நின்று இறைவனைப் பாடியவர். முருகப்பெருமானின் குழந்தையும் நிலையும் இவரின் குழந்தை நிலையும் அருணகிரிநாதருக்கு மகிழ்வைத் தந்திருக்கின்றன என்பது உறுதி.
மற்றொரு பாடலில் பிரகலாதன் பற்றிய குறிப்பு காணப்படுகிறது. குழந்தைகள் மீது ஆறா அன்பு உடைய நிலை மனிதர்களுக்கு உரியது. குழந்தைத் தெய்வங்கள் மீது தீராப் பற்று உடையவர் அருணகிரிநாதர் என்பதை மேற்கண்ட செய்திகள் உறுதி செய்கின்றன.
செங்கணன் மதலையிடம் இங்குளான் என்னு நர சிங்கமாய் இரணியன் உடல் சிந்த உகிரில் கொடு பிளந்த மால் மருகன் சேவல் திருத்துவசமே (பாடல்எண். 6)
என்ற பாடலில் பிரகலாதனின் செயல் குறிப்பாகக் காட்டப் பெற்றுள்ளது.
இவை தவிர பல புராணக் கதைகளையும் இப்பகுதியில் நினைவு கூர்கிறார் அருணகிரிநாதர். அவற்றில் ஒன்று பின்வருமாறு,
தேன் ஆன மைக்கடலின் மீனானவற்கு இனியன் சேவல் திருத்துவசமே (பாடல். 5)
நந்தி தேவர் மீனாக மாறிய புராணச் செய்தி இங்கு நினைவு கூரப் பெற்றுள்ளது. ஒரு முறை கயிலையில் சிவன் உபதேசித்துக் கொண்டிருக்கும்போது உமை அருகிருந்த பொழிலில் உள்ள மீனின் மீது நாட்டம் செலுத்தினாள். இதனால் கோபுமுற்ற பெருமான் உமையை மீனவப் பெண்ணாகப் பிறக்கச் செய்தார். உடன் இருந்த நந்தியை மீனாகப் போகும்படி சபித்தார். மீனவத் தலைவன் மகளாக உமை பிறக்க எவர்க்கும் அகப்படா மீனாக நந்திதேவர் பிறந்தார். இவ்வகப்படா மீனைப் பிடிப்பவருக்குத் தன் மகளைத் தருவதாக மீனவத் தலைவன் போட்டி வைத்தான். அப்போது பெருமான் செம்படவனாக வந்து இருவரையும் ஏற்றhர் என்ற புராணக் கதை இங்கு அருணகிரிநாதரால் எடுத்துக் காட்டப் பெற்றிருக்கிறது.
இதுபோல தமிழின் பெருமையையும் அருணகிரிநாதர் இவ்விருத்தப் பாடல் ஒன்றில் காட்டியுள்ளார். முருகன் தமிழ்க் கடவுள். அகத்தியர்க்குத் தமிழ் உரைத்த கடவுள். சங்கம் ஏறிப் பாடல் ஏற்ற கடவுள். அவ்வகையில் முருகனின் தமிழார்வ நிலையைப் பின்வரும் பாடல் காட்டுகின்றது.
. . . புகழ்ச் செட்டி சுப்ரமணியன் செச்சைப் புயத்தன் நவ ரத்ன க்ரிடத்தன் மொழி தித்திக்கும் முத்தமிழினைத் தெரியவரு பொதிகை மலை முனிவர்க்கு உரைத்தவன் சேவல் திருத்துவசமே (பாடல் 4)
என்ற பாடலில் செட்டி சுப்பிரமணியன் என முருகன் வணிக மரபு சார்ந்தவனாகக் காட்டப் பெறுகிறhன். மேலும் மொழி தித்திக்கும் முத்தமிழ் எனத் தமிழ் சிறப்பிக்கப் பெறுகிறது. பொதிகை மலை முனிவரான அகத்தியர்க்குத் தமிழ் உரைத்த செய்தியும் இங்குக் காட்டப் பெறுகின்றது. அவ்வளவு தமிழ்ச்சுவை உடைய முருகனின் கையில் இருப்பது சேவல் கொடி என்று கொடியைச் சிறப்பிக்கின்றார் அருணகிரிநாதர்.
அடுத்து முருகன் உறையும் இடங்களைப் பட்டியல் இடுகிறார் அருணகிரிநாதர்.
.. . குன்றுதோறாடல் பழனம் குலவு பழமுதிர்சோலை ஆவினன்குடி பரங் குன்றிடம் திருவேரகம் திரையாழி முத்தைத் தரங்கக் கை சிந்தித் தெறித்திடும் செந்தில்நகர் வாழ் திடமுடைய அடியார் தொழு பழையவன் குலவுற்ற சேவல் திருத்துவசமே (பாடல் 9)
அடுத்த பாடலில் மயில் ஆடும் முறைமையை வியக்கிறhர்.
திகுடதிகு டதிதிகுட தகுட தித குடதிகுட செக்கண செக்கண எனத் திருநடனம் இடு மயிலில் வரு குமர குருபரன் சேவல் திருத்துவசமே (பாடல் 10)
நிறைவுப்பாடலில் முருகனின் திருப்பெயர்களைச் சொல்லி அருணகிரிநாதர் மகிழ்கிறhர்.
கனக மயில் வாகனன் அடல்சேவகன் இராசத இலக்கண உமைக்குஒரு சிகாமணி சரோருமுகச் சீதள குமார கிருபாகர மனோகரன் வேல் திருத்துவசமே.(பாடல் 11)
இப்பாடலில் மயில்வாகனன், அடல் சேவகன் (வலிமை மிக்க வீரன்), உமை சிகாமணி, சரோருக முகன் (தாமரை முகன்), சீதளன் (தன்மையான குணத்தவன்), குமாரன் ( இளமையானவன்), மனோகரன் (அடியார்க்கு என்றும் மகிழ்வைத்தருபவன்) என்று முருகனின் நாமங்களைப் பலபட பேசுகின்றார் அருணகிரிநாதர். இவ்வகையில் சேவல் விருத்தம் முருகனின் படைவீடுகள், முருகனின் மயில்வாகனச் சிறப்பு, முருகனின் நாமங்கள் முதலனவற்றை எடுத்துக் காட்டி அதன்வழி சேவல் கொடியை நினைவு படுத்திப் பக்தர்களைக் கலக்கத்தில் இருந்து விடுவிக்கின்றது.
இச்சேவல் கொடியை மையமாக வைத்து அருணகிரிநாதர் சேவல் விருத்தம் பாடியுள்ளார். பதினோரு பாடல்களை உடைய இப்பகுதி பயம் நீக்கும். ஏவல், பில்லி, சூனியம், பேய், பிசாசு முதலியவற்றhல் ஏற்படும் ஏதங்களை விரட்டும் தன்மை வாய்ந்தது. எம பயத்தையும் போக்கும் வல்லமை இதற்கு உள்ளது. இவ்வகையில் தினமும் பாராயணம் செய்ய வேண்டிய நிலையில் பெருமை பெற்றது சேவல் விருத்தம் ஆகும். இதனுள் பல அரிய கருத்துகளைத் தொகுத்து் வைத்துள்ளார் அருணகிரிநாதர்.
மாயை எனும் இருள் வயப்பட்டு உலகம் தூங்குகிறது. இம்மாயையை விரட்டி ஒளியின் வருகையை உலகிற்கு உணர்த்தும் அரிய பணியைச் சேவல் தினந்தோறும் செய்து வருகின்றது. இது நடைமுறை. இந்நடைமுறையைச் சைவ சித்தாந்தக் கருத்துடன் இணைத்து அருணகிரிநாதர் சேவலை வாழ்த்துகிறார்.
உலகில் அநுதினமும் வரும் அடியவர்கள் இடர் அகல உரிய பரகதி தெரியவே உரகமணி என உழலும் இருவினையும் முறைபடவும் இருள்கள் மிடி கெட அருளியே கலகமிடும் அலகைக் குறள் மிகு பணிகள் வலிமையொடு கடினமுற வரில் அவைகளைக் கண்ணைப் பிடுங்கி உடல் தன்னைப் பிளந்து சிற கைக் கொட்டி நின்று ஆடுமாம் (பாடல் .1)
எனச் சேவலின் ஆடலைத் தெரிவிக்கின்றார் அருணகிரிநாதர். இருவினையும் முறைபடவும் இருள்கள் மிடி கெட அருளி நிற்கும் சேவலின் நிலை சித்தாந்த வயப்பட்டதாகும். உலகில் ஒரே இருள்தான் உண்டு. அவ்வாறு இருக்கையில் அருணகிரிநாதல் இருள்கள் என பன்மைப்படுத்திக் கூறுவதன் நோக்கம் என்ன என்றுச் சிந்தித்தால் அது விளங்கும். மாயை, கன்மம், ஆணவம் என்ற இருள்கள் கவிவதன் மூலம் நல்வினை, தீவினை என்ற இரு வினைகள் எழுந்து உயிரை நிலைபெறச் செய்யாது. ஆண்டவனை அடையச் செய்யாது அலைத்துக் கொண்டிருக்கின்றன என்ற கருத்தை உணர்த்துவதற்காகவே அருணகிரிநாதர் இப்பாடலில் இருள்கள் எனக் குறித்துள்ளார்.இவ்விருளைக் கெடுப்பது சேவல் என்று பெருமைப்படுத்தப் படுகிறது.
இச்சேவல் எம பயம் நீக்கும் என மற்றொரு பாடலில் காட்டுகின்றார் அருணகிரிநாதர்.
கரி முரட்டடி வலைக் கயிறு எடுத்து எயிறு பற் களை இறுக்கியும் முறைத்துக் கலகமிட்டு எமன் முன் கரம் உறத்துடரும் அக் காலத்தில் வேலும் மயிலும் குருபரக் குகனும் அப்பொழுதில் நட்புடன் வரக் குரல் ஒலித்து அடியார் இடரைக் குலைத்து முட்ட வருமாம் (பாடல் 3.)
என்று எமன் வருகையில் குரல் தந்து உயிர்களை நற்கதிக்கு அழைத்துச் செல்லும் பெருமை பெற்றதாகச் சேவல் விளணங்குகின்றது.
இச்சேவலை வணங்குவதால் பல நோய்களும் முருகன் அருளால் முகனடியார்களுக்கு ஏற்படாது. ஏற்பட்டாலும் வருத்தாது அவை ஒழியும் என உறுதி பட மற்றொரு பாடலில் அருணகிரிநாதர் காட்டுகின்றார்.
மாறாத முயலகன் வயிற்றுவலி குன்மம் மகோதரம் பெருவியாதி வாத பித்தம் சிலேற்பனம் குட்ட முதலான வல்ல பிணிகளை மாற்றியே சீறாத ஓராறு திருமுகம் மலர்ந்து அடியார் சித்தத்தில் இருக்கும் முருகன் சிலைகள் உருவிட அயிலை விடு குமர குருபரன் சேவல் திருத்துவசமே (பாடல் 7)
என்பதில் முயலக நோய் (காக்காய் வலிப்பு), வயிற்று வலி, குன்மம் (வயிறு உலைச்சல்), மகோதரம் (பெருவயிறு), பெருவியாதி (பால் வினை நோய்கள்) வாதம், பித்தம், சிலேட்டுமம், குட்டம் போன்ற வல்ல பிணிகளை மாற்றும் போக்கினை உடையது முருகப் பெருமானின் அருள். இக்காலத்தில் இப்பாடல் மிகு தேவையான பாடலாகும். ஏனெனில் நோயில்லா மனிதரில் உலகில் இல்லை. எனவே அனைவரும் பாராயணம் செய்ய வேண்டிய பாடல் இது என்பதில் ஐயமில்லை.
இவ்வாறு சேவலை வணங்கினால் ஏற்படும் நன்மைகள் இப்பதிகத்தில் அதிக அளவில் எடுத்துரைக்கப் பெற்றுள்ளன. இச்சேவல் விருத்தத்தில் சம்பந்தர், பிரகலாதன் பற்றிய குறிப்புகளும் அருணகிரிநாதரால் காட்டப்பெற்றுள்ளன.
அரிய கொற்கையன் உடற் கருகும் வெப் பகையை உற் பனம் உரைத்து அதம் மிகவும் ஏதம் அமணரைக் கழுவில் வைத்தவரும் மெய்ப்பொடி தரித்து அவனி மெய்த்திட அருளதார் சிரபுரத்து அவதரித்து அமுதத் தினமணிச் சிவிகை பெற்று இனிய தமிழைச் சிவன் நயப்புற விரித்து உரை செய் விற்பனன் இகல் சேவல் திருத்துவசமே (பாடல்.3)
என்ற பாடலில் ஞான சம்பந்தப் பெருமான் சிரபுரத்தில் பிறந்த நிலை, பாண்டியனின் வெப்பு நோய் தீர்த்த வரலாறு, சிவிகை பெற்ற அருள் செயல், சிவன் நயப்புற தமிழ் பாடியமை ஆகியன நிகழ்வுகள் தொட்டுக் காட்டப் பெற்றுள்ளன. திருநீற்றுப் பதிகம் என்ற சொல் மாலையால் நோய் நீங்கிய தன்மை போல சேவல் விருத்தப் பாடல்களைப் பாடுவோருக்கும் நோய் நீங்கும் என்ற அடிப்படையில் இவற்றை இவ்விருத்தத்தில் அருணகிரிநாதர் கையாண்டிருக்க வேண்டும். எவ்வகை ஆயினும் சம்பந்தப் பெருமான் குழந்தையாக நின்று இறைவனைப் பாடியவர். முருகப்பெருமானின் குழந்தையும் நிலையும் இவரின் குழந்தை நிலையும் அருணகிரிநாதருக்கு மகிழ்வைத் தந்திருக்கின்றன என்பது உறுதி.
மற்றொரு பாடலில் பிரகலாதன் பற்றிய குறிப்பு காணப்படுகிறது. குழந்தைகள் மீது ஆறா அன்பு உடைய நிலை மனிதர்களுக்கு உரியது. குழந்தைத் தெய்வங்கள் மீது தீராப் பற்று உடையவர் அருணகிரிநாதர் என்பதை மேற்கண்ட செய்திகள் உறுதி செய்கின்றன.
செங்கணன் மதலையிடம் இங்குளான் என்னு நர சிங்கமாய் இரணியன் உடல் சிந்த உகிரில் கொடு பிளந்த மால் மருகன் சேவல் திருத்துவசமே (பாடல்எண். 6)
என்ற பாடலில் பிரகலாதனின் செயல் குறிப்பாகக் காட்டப் பெற்றுள்ளது.
இவை தவிர பல புராணக் கதைகளையும் இப்பகுதியில் நினைவு கூர்கிறார் அருணகிரிநாதர். அவற்றில் ஒன்று பின்வருமாறு,
தேன் ஆன மைக்கடலின் மீனானவற்கு இனியன் சேவல் திருத்துவசமே (பாடல். 5)
நந்தி தேவர் மீனாக மாறிய புராணச் செய்தி இங்கு நினைவு கூரப் பெற்றுள்ளது. ஒரு முறை கயிலையில் சிவன் உபதேசித்துக் கொண்டிருக்கும்போது உமை அருகிருந்த பொழிலில் உள்ள மீனின் மீது நாட்டம் செலுத்தினாள். இதனால் கோபுமுற்ற பெருமான் உமையை மீனவப் பெண்ணாகப் பிறக்கச் செய்தார். உடன் இருந்த நந்தியை மீனாகப் போகும்படி சபித்தார். மீனவத் தலைவன் மகளாக உமை பிறக்க எவர்க்கும் அகப்படா மீனாக நந்திதேவர் பிறந்தார். இவ்வகப்படா மீனைப் பிடிப்பவருக்குத் தன் மகளைத் தருவதாக மீனவத் தலைவன் போட்டி வைத்தான். அப்போது பெருமான் செம்படவனாக வந்து இருவரையும் ஏற்றhர் என்ற புராணக் கதை இங்கு அருணகிரிநாதரால் எடுத்துக் காட்டப் பெற்றிருக்கிறது.
இதுபோல தமிழின் பெருமையையும் அருணகிரிநாதர் இவ்விருத்தப் பாடல் ஒன்றில் காட்டியுள்ளார். முருகன் தமிழ்க் கடவுள். அகத்தியர்க்குத் தமிழ் உரைத்த கடவுள். சங்கம் ஏறிப் பாடல் ஏற்ற கடவுள். அவ்வகையில் முருகனின் தமிழார்வ நிலையைப் பின்வரும் பாடல் காட்டுகின்றது.
. . . புகழ்ச் செட்டி சுப்ரமணியன் செச்சைப் புயத்தன் நவ ரத்ன க்ரிடத்தன் மொழி தித்திக்கும் முத்தமிழினைத் தெரியவரு பொதிகை மலை முனிவர்க்கு உரைத்தவன் சேவல் திருத்துவசமே (பாடல் 4)
என்ற பாடலில் செட்டி சுப்பிரமணியன் என முருகன் வணிக மரபு சார்ந்தவனாகக் காட்டப் பெறுகிறhன். மேலும் மொழி தித்திக்கும் முத்தமிழ் எனத் தமிழ் சிறப்பிக்கப் பெறுகிறது. பொதிகை மலை முனிவரான அகத்தியர்க்குத் தமிழ் உரைத்த செய்தியும் இங்குக் காட்டப் பெறுகின்றது. அவ்வளவு தமிழ்ச்சுவை உடைய முருகனின் கையில் இருப்பது சேவல் கொடி என்று கொடியைச் சிறப்பிக்கின்றார் அருணகிரிநாதர்.
அடுத்து முருகன் உறையும் இடங்களைப் பட்டியல் இடுகிறார் அருணகிரிநாதர்.
.. . குன்றுதோறாடல் பழனம் குலவு பழமுதிர்சோலை ஆவினன்குடி பரங் குன்றிடம் திருவேரகம் திரையாழி முத்தைத் தரங்கக் கை சிந்தித் தெறித்திடும் செந்தில்நகர் வாழ் திடமுடைய அடியார் தொழு பழையவன் குலவுற்ற சேவல் திருத்துவசமே (பாடல் 9)
அடுத்த பாடலில் மயில் ஆடும் முறைமையை வியக்கிறhர்.
திகுடதிகு டதிதிகுட தகுட தித குடதிகுட செக்கண செக்கண எனத் திருநடனம் இடு மயிலில் வரு குமர குருபரன் சேவல் திருத்துவசமே (பாடல் 10)
நிறைவுப்பாடலில் முருகனின் திருப்பெயர்களைச் சொல்லி அருணகிரிநாதர் மகிழ்கிறhர்.
கனக மயில் வாகனன் அடல்சேவகன் இராசத இலக்கண உமைக்குஒரு சிகாமணி சரோருமுகச் சீதள குமார கிருபாகர மனோகரன் வேல் திருத்துவசமே.(பாடல் 11)
இப்பாடலில் மயில்வாகனன், அடல் சேவகன் (வலிமை மிக்க வீரன்), உமை சிகாமணி, சரோருக முகன் (தாமரை முகன்), சீதளன் (தன்மையான குணத்தவன்), குமாரன் ( இளமையானவன்), மனோகரன் (அடியார்க்கு என்றும் மகிழ்வைத்தருபவன்) என்று முருகனின் நாமங்களைப் பலபட பேசுகின்றார் அருணகிரிநாதர். இவ்வகையில் சேவல் விருத்தம் முருகனின் படைவீடுகள், முருகனின் மயில்வாகனச் சிறப்பு, முருகனின் நாமங்கள் முதலனவற்றை எடுத்துக் காட்டி அதன்வழி சேவல் கொடியை நினைவு படுத்திப் பக்தர்களைக் கலக்கத்தில் இருந்து விடுவிக்கின்றது.
தனி ஆண்மை கொண்ட நெடுவேல்
வேல் தமிழரின் அக, புற வாழ்வில் சிறப்பிடம் பெற்றதாகும். அக வாழ்வில் வேலன் வெறியாடலில் வேல் முக்கிய இடம் பிடித்து இருக்கும். தலைவியின் அகநோய் அதன்வழி தீர்க்கப் பெறும். புறவாழ்வில் தன் கவணவன், தன் தந்தை, தன் பிள்ளை என்ற முத்தலைமுறையிடத்திலும் வேல் இருந்து வீரம் கூட்டும். இவ்வகையில் தமிழரின் வாழ்வில் வேல் நீங்கா இடம் பெற்றுள்ளது.
திருமுருகனின் கை வேல் புராணச் சிறப்பும் வீரச் சிறப்பும் மிக்கது. அதுவே முருகனின் அடையாளமாகவும், முருகனாகவும் கொள்ளத்தக்க பெருமையைப் பெற்றது. இவ்வேலை வணங்குவதையே முருக அடியார்கள் தங்கள் வேலையாகக் கொள்வர். அவ்வழியில் முருகனின் கை வேலைச் சிறப்பித்து அருணகிரிநாதர் வேல் விருத்தம் பாடியுள்ளார்.
பதிக அடிப்படை உடைய இவ்வேல் விருத்தம் பத்துப்பாடல்களைத் தன்னுள் அடக்கியது. மயில் விருத்தம், வேல் விருத்தம், சேவல் விருத்தம் ஆகிய மு்ன்றும் அளவால் ஏறக்குறைய ஒத்தன. மற்ற அருணகிரிநாதரின் படைப்புகளைக் காட்டிலும் உருவால் குறைந்தனவே அன்றி அருளால் மற்றவற்றிற்கு ஈடாகும் தன்மையன. அலங்காரம், புகழ், அனுபூதி ஆகியவற்றிற்கு ஈடான தனித்தன்மையை இவை மு்ன்றும் பெற்றிருப்பதால் அருணகிரிநாதரின் படைப்பு வகைமைகளுள் இவை சிறந்து விளங்குகின்றன.
வேல் விருத்தத்தில் பல செய்திகளைக் காட்டி மகிழ்கிறார் அருணகிரிநாதர். இந்த வேல் பகைவர்களை அழிக்கத் தக்க பெருமையது. பகைவர் உடலில் தங்காத பெருமையது.
அண்டங்கள் ஒரு கோடி ஆயினும் குலகிரி அனந்தம் ஆயினும் மேவினால் அடைய உருவிப் புறம் போவது அல்லது தங்கல் அறியாது (பாடல் 7.)
என்ற அருணகிரிநாதரின் கூற்று இவ்வேலின் ஆற்றலை எடுத்துரைப்பதாகும். அண்டங்கள் ஆயிரம் தடுத்தாலும், மலைகள் அனைத்தும் தடுத்து நின்றாலும் இதன் ஆற்றலைத் தடுக்க இயலாது. தாக்கும் இலக்கினைத் தாக்கிப் புறம் போகும் தன்மையை உடையது இவ்வேல்.
இவ்வேல் சூரபதுமன் ஒளிந்திருந்த கருங்கடலை வற்றச் செய்த பெருமையை உடையது. இவ்வேலினைக் கண்டு மற்றக் கடல்கள் எல்லாம் கலங்கின. அக்கருங்கடலைப் போல எங்களையும் வற்றச் செய்துவிடாதே என அவை கலங்கினவாம். மேலும் இவ்வேலைக் கண்டு மலைகள் எல்லாம் மருண்டன. முன்னர் கிரௌஞ்ச மலையை அழித்தது போல எங்களையும் அழிந்து விடாதே என்று இவையும் கலங்கின. இவ்வகையில் வேலின் சேவடியைப் பிடித்து மலைகளும் கடல்களும் எங்களைக் காக்க வேண்டும் என்று வேண்டி நின்றன எனக் கற்பனை பொங்க வேலின் வெற்றியைப் புகழ்கிறார் அருணகிரிநாதர்.
நீடுமைக்கடல் சுட்டதிற்கு அடைந்து எழுகடலும் நீ எமைக் காக்க எனவும் நிபிடமுடீ நெடியகிரி எந்தமைக் கா எனவும் நிகழ்கின்ற துங்க நெடுவேல் (பாடல். 9)
என்பது மேற்குறிப்பிட்ட செய்தியைத் தரும் பாடலாகும்.
கடல் வற்றிய இதே நிலை கொண்டு ஓர் உயர் கற்பனையை முதல் பாடலில் பதிவு செய்கிறார் அருணகிரிநாதர். முருகப் பெருமானின் கை வேல் கடலை வற்றச் செய்தது. இதனால் அக்கடலில் இருந்த மீன்கள் எல்லாம் சேற்றில் புரண்டன. நீரின்மையால் சூரியக் கதிர்கள் அனைத்தும் பாதாளம் வரை சென்று ஆதிசேடனின் முடியைத் தாக்கின. மேகக் கூட்டங்கள் நீரின்றி கலக்கமடைந்தன. வேடர் வீடுகளில் கடலில் இருந்த முத்துக்கள் தேக்கம் பெற்றன. அம்முத்துக்களை வேடர்கள் தந்து செந்நெல்லை மருத நில மக்களிடம் இருந்து பெற்றுக் கொண்டனர். புனித ஆறுகளாக கங்கை, யமுனை, சரசுவதி போன்றன வேலின் தொடுதலால் நற்கதி பெற்றன. கடல் மேடானது. இக்கற்பனையில் அறிவியல் உண்மையும் கலந்து நிற்கிறது. உலகம் மேடு பள்ளமாகவும், பள்ளம் மேடாகவும் மாறும் தன்மையைப் பெற்றது என்ற உண்மை வயப்பட்டு இக்கற்பனையை அருணகிரிநாதர் படைத்துள்ளார். (பாடல் ஒன்றின் கருத்து). இவ்வகையில் முருகன் கைவேல் வலிமை வாய்ந்ததாக விளங்குகிறது.
இவ்வேலின் கழுத்தில் மணி கட்டப் பெற்று இருந்தது. இந்த மணியின் ஓசை கேட்டதும் அண்ட உலகங்கள் சுழன்றன. எண்திசைகள் சுழன்றன. அக்கினியும் சுழன்றது. அலைகடல்கள் சுழன்றன. அரக்கர்களின் உயிரும் நில்லாமல் சுழன்றது. அகில் தலமும் சுழன்றன. நு}று கோடி எண்ணிக்கையின் மிக்க நட்சத்திரங்களும், சூரியக் கோள்களும் சுழன்றன. இவ்வகையில் வேலின் சுழற்றலில் கேட்கும் மணியோசைக்கு இத்தகைய வலிமை இருந்துள்ளது என்பது கருதத்தக்கது.
இவ்வேல் சிவன், திருமால், இந்திரன், சூரன் ஆகியோரின் ஆயுதங்களான சூலம், சக்கரம், வச்சிராயுதம்,சூலம் ஆகியவைகளை விட வலிமை பெற்றது. இவ்வல்லமை பெற்ற வேலை உடைய முருகனை நான்முகனும் தேவர்களும் வணங்கிச் சூரனை அடிமையாக்க வேண்டினர். அவ்வகையில் அதனை முடித்த தனி ஆளுமை பெற்ற நெடுவேலாக அது விளங்குகிறது.
வெங்காளர் கண்டர் கைச் சூலமும் திருமாயன் வெற்றிபெறு சுடர் ஆழியும் விபதர்பதி குலிசமும் சூரன் சூலம் கல்லி வெல்லாது எனக் கருதியே சங்க்ராம நீ சயித்து அருள் எனத் தேவரும் சதுர்முகனும் நின்று இரப்ப சயிலமொடு சூரன் உடல் ஒரு நொடியில் உருவியே தனி ஆண்மை கொண்ட நெடுவேல் (பாடல் .2)
என இதன் வலிமையை உணர்த்துகின்றhர் அருணகிரிநாதர்.
இவ்வாறு சூரனை வென்றதால் தேவர்கள் மகிழ்ந்தனர். தேவமகளிர் தனது ஆட்டங்களின்போது இவ்வெற்றியை வாய் ஓயாமல் பாடியபடியே இருந்தனர்.
பந்தாடலில் கழங்காடலில் சுடர் ஊசல் பாடலினொடு ஆடலில் எலாம் பழம் தெவ்வர் கட்கம் துணிந்து இந்திரர்க்க அரசு பாலித்த திறல் புகழ்ந்தே சாந்தரு நாள்மலர்க் குழல் அரம்பையர்களும் சசி மங்கை அனையர் தாமும் தன்னை அன்பொடு பாடி ஆடும் பிரதாபமும் தலைமையும் பெற்ற வேல் (பாடல் 6)
என்ற பாடலில் இவ்வாடல் முறை காட்டப் பெற்றுள்ளது. குறிப்பாக சசி என்ற இந்திரனின் மனைவியும் இவ்வாடல் பாடலில் பங்கேற்றுள்ளாள் என்று அருணகிரிநாதர் குறித்திருப்பது கருதத்தக்கது. ஏனெனில் அவளையே சூரன் கைக் கொண்டு இந்த;ரனின் பதவிக்கு ஆட்டம் விளைவித்தான். எனவே அவள் வேலின் வெற்றியைப் பாடுவது சிறப்பிற்குரியதாகும்.
இது அரக்கர்களுக்கு விடம் போன்றது. தேவர்களுக்கு அமுதம் போன்றது. அரிய முனிவருக்கு நிலவின் குளிர்மை உடையது. தீயோர்க்கு ஆதவனின் வெம்மையைப் போன்றது. அன்பர்க்கு மு்ல வினை முடிக்கத் தக்கது என அதன் தன்மைகளை அடுக்கி உரைக்கின்றார் அருணகிரிநாதர்.
ஆலமாய் அவுணருக்கு அமரருக்கு அமுதமாய் ஆதவனின் வெம்மை ஒளிமீது அரிய தவ முனிவருக்கு இந்துவின் தண்ணென்று அமைந்து அன்பருக்கு முற்ற மூலமாம் வினையறுத்து அவர்கள் வெம்பகையினை முடித்து இந்திரர்க்கு எட்டா முடிவில் ஆனந்தம் நல்கும் பதம் அளித்து எந்த மு்தண்டமும் புகழும் வேல் (பாடல்5)
என்ற இப்பாடல் வேலினை வணங்குவதால் ஏற்படும் பயன்களை எடுத்துக்காட்டுகிறது.
இவ்வேலை வழங்கியவள் உமையம்மை. அவளைப் போற்றித் துதிக்கின்றது ஒரு பாடல். கங்காளி? சாமுண்டி, வாராகி, இந்திராணி, கௌமாரி, கமலாசனக் கன்னி, நாரணி, குமரி, திரிபுரை, பைரவி, அமலை, கௌரி, காமாட்சி, சைவ சிங்காரி, யாமளை, பவானி,கார்த்திகை, கொற்றி, திரியம்பகி அளித்த செல்வச் சிறுவன் முருகன் எனப் போற்றுவதன் மு்லம் இப்பாடல் உமையம்மையைப் புகழ்கின்றது. (பாடல். 2)
சிவபெருமானையும் ஒரு பாடல் சிறப்பிக்கின்றது. அமிர்த கலசம் போன்ற பிறையைத் தன் தலையில் சூடியவன், காலனுக்குக் காலனானவன், மேருவை வில்லாகக் கெண்டவன், வாள்,சூலம்- வச்சிரப் படை உடையவன், அக்கினியை மஞ்சனநீராகக் கொண்டவன், சங்கணிந்தவன், முக்கண்ணன், திசைகளையே ஆடையாக உடையவன் ஆன சிவ பெருமானின் புதல்வர் கைக் கொண்ட வேல் என்று வேலினைச் சிவத் தொடர்பு படுத்தி இவர் வணங்குகிறhர்.(பாடல். 8)
திருமாலையும் மற்றொரு பாடல் சிறப்பிக்கின்றது. கௌமோதகி என்ற கதாயுதம், சுதர்சன சக்கரம், சாரங்கம் என்ற வில், பாஞ்சசன்னியம் என்ற சங்கு, நாந்தகம் என்ற வாள் கொண்டு ஆதிசேடன் மீது படுத்திருக்கும் பெருமானின் காலடிகளைத் திருமகளும் மண்மகளும் வருட அரிதுயில் கொள்ளும் மயானது மருகன் முருகன். அவனின் கை வேல் சிறப்பிற்குரியது (பாடல் 7)
அடுத்து முருகனின் கோயில்கள் உள்ள இடங்களை ஒருபாடலில் சிறப்பிக்கின்றார் அருணகிரிநாதர்.
தாதா மலர்ச்சுனைப் பழனிமலை சோலைமலை தனிப்பரங்குன்று, ஏரகம் தணிகைச் செந்தூர், இடைக்கழி, ஆவினன் குடி தடங்கடல் இலங்கை அதனில் போதார் பொழில் கதிர்காமம் தலத்தினனப் புகழும் அவர் அவர் நாவினில் புந்தியில் அமர்ந்தவன் கந்தன் முருகன் குகன் புணு;கவன் செணு;கை வேலே(பாடல்,3)
என்ற அவரின் பட்டியல் வேலனின் சிறப்பினை வேலோடு காண்பதாகும்.
இவ்வகையில் வேலின் சிறப்பினைப் பண்பினை அருளினைத் தொகுத்துத் தருவதாக வேல் விருத்தம் விளங்குகின்றது.
திருமுருகனின் கை வேல் புராணச் சிறப்பும் வீரச் சிறப்பும் மிக்கது. அதுவே முருகனின் அடையாளமாகவும், முருகனாகவும் கொள்ளத்தக்க பெருமையைப் பெற்றது. இவ்வேலை வணங்குவதையே முருக அடியார்கள் தங்கள் வேலையாகக் கொள்வர். அவ்வழியில் முருகனின் கை வேலைச் சிறப்பித்து அருணகிரிநாதர் வேல் விருத்தம் பாடியுள்ளார்.
பதிக அடிப்படை உடைய இவ்வேல் விருத்தம் பத்துப்பாடல்களைத் தன்னுள் அடக்கியது. மயில் விருத்தம், வேல் விருத்தம், சேவல் விருத்தம் ஆகிய மு்ன்றும் அளவால் ஏறக்குறைய ஒத்தன. மற்ற அருணகிரிநாதரின் படைப்புகளைக் காட்டிலும் உருவால் குறைந்தனவே அன்றி அருளால் மற்றவற்றிற்கு ஈடாகும் தன்மையன. அலங்காரம், புகழ், அனுபூதி ஆகியவற்றிற்கு ஈடான தனித்தன்மையை இவை மு்ன்றும் பெற்றிருப்பதால் அருணகிரிநாதரின் படைப்பு வகைமைகளுள் இவை சிறந்து விளங்குகின்றன.
வேல் விருத்தத்தில் பல செய்திகளைக் காட்டி மகிழ்கிறார் அருணகிரிநாதர். இந்த வேல் பகைவர்களை அழிக்கத் தக்க பெருமையது. பகைவர் உடலில் தங்காத பெருமையது.
அண்டங்கள் ஒரு கோடி ஆயினும் குலகிரி அனந்தம் ஆயினும் மேவினால் அடைய உருவிப் புறம் போவது அல்லது தங்கல் அறியாது (பாடல் 7.)
என்ற அருணகிரிநாதரின் கூற்று இவ்வேலின் ஆற்றலை எடுத்துரைப்பதாகும். அண்டங்கள் ஆயிரம் தடுத்தாலும், மலைகள் அனைத்தும் தடுத்து நின்றாலும் இதன் ஆற்றலைத் தடுக்க இயலாது. தாக்கும் இலக்கினைத் தாக்கிப் புறம் போகும் தன்மையை உடையது இவ்வேல்.
இவ்வேல் சூரபதுமன் ஒளிந்திருந்த கருங்கடலை வற்றச் செய்த பெருமையை உடையது. இவ்வேலினைக் கண்டு மற்றக் கடல்கள் எல்லாம் கலங்கின. அக்கருங்கடலைப் போல எங்களையும் வற்றச் செய்துவிடாதே என அவை கலங்கினவாம். மேலும் இவ்வேலைக் கண்டு மலைகள் எல்லாம் மருண்டன. முன்னர் கிரௌஞ்ச மலையை அழித்தது போல எங்களையும் அழிந்து விடாதே என்று இவையும் கலங்கின. இவ்வகையில் வேலின் சேவடியைப் பிடித்து மலைகளும் கடல்களும் எங்களைக் காக்க வேண்டும் என்று வேண்டி நின்றன எனக் கற்பனை பொங்க வேலின் வெற்றியைப் புகழ்கிறார் அருணகிரிநாதர்.
நீடுமைக்கடல் சுட்டதிற்கு அடைந்து எழுகடலும் நீ எமைக் காக்க எனவும் நிபிடமுடீ நெடியகிரி எந்தமைக் கா எனவும் நிகழ்கின்ற துங்க நெடுவேல் (பாடல். 9)
என்பது மேற்குறிப்பிட்ட செய்தியைத் தரும் பாடலாகும்.
கடல் வற்றிய இதே நிலை கொண்டு ஓர் உயர் கற்பனையை முதல் பாடலில் பதிவு செய்கிறார் அருணகிரிநாதர். முருகப் பெருமானின் கை வேல் கடலை வற்றச் செய்தது. இதனால் அக்கடலில் இருந்த மீன்கள் எல்லாம் சேற்றில் புரண்டன. நீரின்மையால் சூரியக் கதிர்கள் அனைத்தும் பாதாளம் வரை சென்று ஆதிசேடனின் முடியைத் தாக்கின. மேகக் கூட்டங்கள் நீரின்றி கலக்கமடைந்தன. வேடர் வீடுகளில் கடலில் இருந்த முத்துக்கள் தேக்கம் பெற்றன. அம்முத்துக்களை வேடர்கள் தந்து செந்நெல்லை மருத நில மக்களிடம் இருந்து பெற்றுக் கொண்டனர். புனித ஆறுகளாக கங்கை, யமுனை, சரசுவதி போன்றன வேலின் தொடுதலால் நற்கதி பெற்றன. கடல் மேடானது. இக்கற்பனையில் அறிவியல் உண்மையும் கலந்து நிற்கிறது. உலகம் மேடு பள்ளமாகவும், பள்ளம் மேடாகவும் மாறும் தன்மையைப் பெற்றது என்ற உண்மை வயப்பட்டு இக்கற்பனையை அருணகிரிநாதர் படைத்துள்ளார். (பாடல் ஒன்றின் கருத்து). இவ்வகையில் முருகன் கைவேல் வலிமை வாய்ந்ததாக விளங்குகிறது.
இவ்வேலின் கழுத்தில் மணி கட்டப் பெற்று இருந்தது. இந்த மணியின் ஓசை கேட்டதும் அண்ட உலகங்கள் சுழன்றன. எண்திசைகள் சுழன்றன. அக்கினியும் சுழன்றது. அலைகடல்கள் சுழன்றன. அரக்கர்களின் உயிரும் நில்லாமல் சுழன்றது. அகில் தலமும் சுழன்றன. நு}று கோடி எண்ணிக்கையின் மிக்க நட்சத்திரங்களும், சூரியக் கோள்களும் சுழன்றன. இவ்வகையில் வேலின் சுழற்றலில் கேட்கும் மணியோசைக்கு இத்தகைய வலிமை இருந்துள்ளது என்பது கருதத்தக்கது.
இவ்வேல் சிவன், திருமால், இந்திரன், சூரன் ஆகியோரின் ஆயுதங்களான சூலம், சக்கரம், வச்சிராயுதம்,சூலம் ஆகியவைகளை விட வலிமை பெற்றது. இவ்வல்லமை பெற்ற வேலை உடைய முருகனை நான்முகனும் தேவர்களும் வணங்கிச் சூரனை அடிமையாக்க வேண்டினர். அவ்வகையில் அதனை முடித்த தனி ஆளுமை பெற்ற நெடுவேலாக அது விளங்குகிறது.
வெங்காளர் கண்டர் கைச் சூலமும் திருமாயன் வெற்றிபெறு சுடர் ஆழியும் விபதர்பதி குலிசமும் சூரன் சூலம் கல்லி வெல்லாது எனக் கருதியே சங்க்ராம நீ சயித்து அருள் எனத் தேவரும் சதுர்முகனும் நின்று இரப்ப சயிலமொடு சூரன் உடல் ஒரு நொடியில் உருவியே தனி ஆண்மை கொண்ட நெடுவேல் (பாடல் .2)
என இதன் வலிமையை உணர்த்துகின்றhர் அருணகிரிநாதர்.
இவ்வாறு சூரனை வென்றதால் தேவர்கள் மகிழ்ந்தனர். தேவமகளிர் தனது ஆட்டங்களின்போது இவ்வெற்றியை வாய் ஓயாமல் பாடியபடியே இருந்தனர்.
பந்தாடலில் கழங்காடலில் சுடர் ஊசல் பாடலினொடு ஆடலில் எலாம் பழம் தெவ்வர் கட்கம் துணிந்து இந்திரர்க்க அரசு பாலித்த திறல் புகழ்ந்தே சாந்தரு நாள்மலர்க் குழல் அரம்பையர்களும் சசி மங்கை அனையர் தாமும் தன்னை அன்பொடு பாடி ஆடும் பிரதாபமும் தலைமையும் பெற்ற வேல் (பாடல் 6)
என்ற பாடலில் இவ்வாடல் முறை காட்டப் பெற்றுள்ளது. குறிப்பாக சசி என்ற இந்திரனின் மனைவியும் இவ்வாடல் பாடலில் பங்கேற்றுள்ளாள் என்று அருணகிரிநாதர் குறித்திருப்பது கருதத்தக்கது. ஏனெனில் அவளையே சூரன் கைக் கொண்டு இந்த;ரனின் பதவிக்கு ஆட்டம் விளைவித்தான். எனவே அவள் வேலின் வெற்றியைப் பாடுவது சிறப்பிற்குரியதாகும்.
இது அரக்கர்களுக்கு விடம் போன்றது. தேவர்களுக்கு அமுதம் போன்றது. அரிய முனிவருக்கு நிலவின் குளிர்மை உடையது. தீயோர்க்கு ஆதவனின் வெம்மையைப் போன்றது. அன்பர்க்கு மு்ல வினை முடிக்கத் தக்கது என அதன் தன்மைகளை அடுக்கி உரைக்கின்றார் அருணகிரிநாதர்.
ஆலமாய் அவுணருக்கு அமரருக்கு அமுதமாய் ஆதவனின் வெம்மை ஒளிமீது அரிய தவ முனிவருக்கு இந்துவின் தண்ணென்று அமைந்து அன்பருக்கு முற்ற மூலமாம் வினையறுத்து அவர்கள் வெம்பகையினை முடித்து இந்திரர்க்கு எட்டா முடிவில் ஆனந்தம் நல்கும் பதம் அளித்து எந்த மு்தண்டமும் புகழும் வேல் (பாடல்5)
என்ற இப்பாடல் வேலினை வணங்குவதால் ஏற்படும் பயன்களை எடுத்துக்காட்டுகிறது.
இவ்வேலை வழங்கியவள் உமையம்மை. அவளைப் போற்றித் துதிக்கின்றது ஒரு பாடல். கங்காளி? சாமுண்டி, வாராகி, இந்திராணி, கௌமாரி, கமலாசனக் கன்னி, நாரணி, குமரி, திரிபுரை, பைரவி, அமலை, கௌரி, காமாட்சி, சைவ சிங்காரி, யாமளை, பவானி,கார்த்திகை, கொற்றி, திரியம்பகி அளித்த செல்வச் சிறுவன் முருகன் எனப் போற்றுவதன் மு்லம் இப்பாடல் உமையம்மையைப் புகழ்கின்றது. (பாடல். 2)
சிவபெருமானையும் ஒரு பாடல் சிறப்பிக்கின்றது. அமிர்த கலசம் போன்ற பிறையைத் தன் தலையில் சூடியவன், காலனுக்குக் காலனானவன், மேருவை வில்லாகக் கெண்டவன், வாள்,சூலம்- வச்சிரப் படை உடையவன், அக்கினியை மஞ்சனநீராகக் கொண்டவன், சங்கணிந்தவன், முக்கண்ணன், திசைகளையே ஆடையாக உடையவன் ஆன சிவ பெருமானின் புதல்வர் கைக் கொண்ட வேல் என்று வேலினைச் சிவத் தொடர்பு படுத்தி இவர் வணங்குகிறhர்.(பாடல். 8)
திருமாலையும் மற்றொரு பாடல் சிறப்பிக்கின்றது. கௌமோதகி என்ற கதாயுதம், சுதர்சன சக்கரம், சாரங்கம் என்ற வில், பாஞ்சசன்னியம் என்ற சங்கு, நாந்தகம் என்ற வாள் கொண்டு ஆதிசேடன் மீது படுத்திருக்கும் பெருமானின் காலடிகளைத் திருமகளும் மண்மகளும் வருட அரிதுயில் கொள்ளும் மயானது மருகன் முருகன். அவனின் கை வேல் சிறப்பிற்குரியது (பாடல் 7)
அடுத்து முருகனின் கோயில்கள் உள்ள இடங்களை ஒருபாடலில் சிறப்பிக்கின்றார் அருணகிரிநாதர்.
தாதா மலர்ச்சுனைப் பழனிமலை சோலைமலை தனிப்பரங்குன்று, ஏரகம் தணிகைச் செந்தூர், இடைக்கழி, ஆவினன் குடி தடங்கடல் இலங்கை அதனில் போதார் பொழில் கதிர்காமம் தலத்தினனப் புகழும் அவர் அவர் நாவினில் புந்தியில் அமர்ந்தவன் கந்தன் முருகன் குகன் புணு;கவன் செணு;கை வேலே(பாடல்,3)
என்ற அவரின் பட்டியல் வேலனின் சிறப்பினை வேலோடு காண்பதாகும்.
இவ்வகையில் வேலின் சிறப்பினைப் பண்பினை அருளினைத் தொகுத்துத் தருவதாக வேல் விருத்தம் விளங்குகின்றது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)