சனி, ஜனவரி 13, 2007

முரண் + பாடுகள்

முரண்பாடுகள்
தோன்றிவிடுகின்றன

எவ்வளவோ தடுத்துப் பார்த்தும்
அவை ஏற்பட்டுவிடுகின்றன

சிந்தனைகளின் மாறுபாடு
செயல்களின் மாறுபாடு
அறிவின் மாறுபாடு
உணர்வின் மாறுபாடு
அதிகாரத்தின் மாறுபாடு

இவை முரண்பாடுகளின்
மூலக் கண்கள்

இவை அன்றி
வளர்ச்சி இல்லை
தாழ்ச்சி இல்லை

முரண்பாடுகள்
சண்டைகளில் முடிவதுண்டு
எதிர்பாராத இன்னல்களில் முடிவதும் உண்டு

முரண்பாடுகளின் முளைகள்
நாளுக்கு நாள் மனிதனைத் தின்று வருகின்றன

இவற்றில்
வெற்றியே கிடையாது
முரண்பாடுகளின்போது
மனிதச் செயல்பாட்டிற்கு
வெற்றி ஏது தோல்வி ஏது

பாதிப்பு
பாதிப்பு இன்மை
இவை மட்டுமே

வெள்ளி, ஜனவரி 12, 2007

திருக்குறளின் வைப்புமுறை மாற்றத் தக்கதா?

திருக்குறள் தமிழ் நூல். தமிழர் நூல். தமிழ்ர்க்கான நூல். இந்தியத் தத்துவங்களின் பிழிவு. உலகின் பொதுமறை. இவை அனைத்தும் திருக்குறளின் முழுமை கருதி அந்நூலுக்குக் கிடைத்த பெருமைகள்.

திருக்குறளின் முழுமை என்பது அதன் முரணபாடற்ற கருத்துவளம், ஏற்றத் தாழ்வில்லா பொது நோக்கு, எக்காலத்திற்கும் பொருந்தும் உண்மை போன்ற பலவற்றால் ஏற்பட்டதாகும். இந்த முழுமையைக் காத்து நிற்பது திருக்குறளின் யாப்பு, அதன் எண்ணிக்கை ஒழுங்கமைவு முதலியனவாகும்.

திருக்குறளின் யாப்பு எக்குறளிலும் குற்றம் குறை இல்லாததாக இடையீடு செய்ய இயலாததாக மிகச் செறிவை, செம்மையை உடையது. அதற்கு உரைகள் மாறுபடலாமே தவிர சொல் நீக்கத்தையோ அல்லது மாற்றத்தையோ அல்லது இடப் பெயர்வையோ எவரும் ஏற்படுத்தி விட முடியாத அளவிற்கு அதன் யாப்பு அமைந்துள்ளது.

திருக்குறளின் எண்ணிக்கை அளவு என்பது ஓரளவிற்குச் செறிவும் செம்மையும் உடையதே என்றாலும் அது யாப்பு அளவிற்கு மிகு கட்டுப்பாடு உடையது அல்ல. ஆயிரத்து முன்னூற்று முப்பது குறட்பாக்கள், நூற்று முப்பத்து மூன்று அதிகாரங்கள், மூன்று பால்கள் என்ற இந்த எண்ணிக்கை வரையறை வேறு எவரும் மிகைப்பாடல்களைப் புகுத்திவிடமுடியாத அளவிற்கு ஓரளவு கட்டுப்பாட்டைத் தருவது. அதாவது அந்தாதி போன்ற இலக்கிய வகைமைகள் போல இத்தனைப் பாடல் என்ற வரையறையைத் திருக்குறளில் வள்ளுவர் ஏற்படுத்திக் கொள்ளவில்லை. அதிகாரத்திற்குப் பத்துக் குறட்பாக்கள் என்பதில் இருக்கும் கட்டுப்பாடு எத்தனை அதிகாரங்கள் எத்தனை பால்கள் என்பதில் இல்லை. எனவே இந்த அமைப்பு குறள் அதிகாரங்களை முன்பின்னாக வைத்துக் கொள்ள, பால்பிரிவுகளை முன் பின்னாக வைத்துக் கொள்ள இடம் தருவதாக உள்ளது.

இருப்பினும் இதன் முழுமையை மரபு வழியாகக் கூறப்பெறும் சில கருத்துகள் காத்துவருகின்றன. 1. திருக்குறள் 'அ' என்ற எழுத்தில் தொடங்கப் பெற்று, 'ன்' என்ற மெய்யெழுத்தில் முடிவதாக உள்ளது. 2. அறம் பொருள் இன்பம் வீடு என்ற பொருள் வரிசையின்படி பால்கள் அமைக்கப் பெற்றுள்ளன. 3. எக்காலத்திற்கும் எல்லார்க்கும் ஏற்ற நூல் - இவை போன்ற தி¢ருக்குறள் பற்றிய சில கருத்துகள் அதன் முழுமையைக் காப்பதற்காக மரபு வழியாகக் கூறப்படும் கருத்துக்களாக உள்ளன.

இக்காப்புகளைக் கடந்து திருக்குறளின் முழுமையைப் பலவகைகளில் மாற்றியமைக்கும் போக்குகள் தற்போது உருவாகி வருகின்றன. அவற்றின் வன்மை மென்மைகளைத் தமிழ்உலகம் ஆராய்ந்து ஏற்கவோ அல்லது மறுக்கவோ வேண்டி உள்ளது.

பரவலாக்கம் என்ற அடிப்படையில் மக்களிடம் அதிகமாகச் சென்றடையச் செய்யப் பெற்ற இலக்கியங்கள் அனைத்திற்கும் இந்தச் சூழல் நிகழ்ந்துள்ளது. சிலப்பதிகார வஞ்சிக்காண்டம் இளங்கோ பாடியாதா இல்லையா அதனை ஏற்பதா வேண்டாமா என்ற கருத்தின் அடிப்படையில் விவாதங்கள் தொடர்ந்து வந்தாலும் கூட அதற்கு தமிழ்மக்கள் தந்த தீர்ப்பு ஏற்கலாம்¢ என்பதே. சிலப்பதிகாரப் பதிப்புகள் அனைத்தும் வஞ்சிக் காண்டத்தை ஏற்றிருப்பதன் வாயிலாகச் சிலப்பதிகார வஞ்சிக் காண்டத்தை தமிழ் மக்கள் இழக்காமல் வைத்தி¢ருக்கிறார்கள் எனத் தௌ¤யலாம். கம்பராமாயணத்திற்கும் இதுபோன்ற ஒரு சூழல் வந்தது. ரசிகமணி கம்பராமாயணப் பாடல்களில் பலவற்றைத் தள்ளியபோதிலும், கம்பராமாயணத்தை மக்களிடம் முன் எடுத்துச் சென்ற கம்பன் கழகங்கள் அதற்கான ஒரு பதிப்பை வெளியிட்டபோது (சென்னை கம்பன் கழகப் பதிப்பு) மிகைப் பாடல்கள் என்ற தலைப்பின் கீழ் கம்பராமாயண ஏட்டுப் பிரதிப் பாடல்கள் அனைத்தையும் ஏற்றுக் கொண்டு பதிப்பு செய்திருப்பது இங்கு கருதத்தக்கது. தொல்காப்பியத்திற்கும் இது போன்ற ஒரு சூழல் வந்தது. அதனை இயல் மாற்றிப் பதிப்பிப்பது (எடுத்துக் காட்டிற்குப் புலவர் குழந்தை உரை) நூற்பாக்களைப் புகுத்துதல் போன்றன நிகழ்ந்தபோதும் இன்றளவும் உரையாசிரியர்கள் பலரால் ஏற்கப் பெற்ற பொது வடிவம் மக்களுக்குக் கிடைத்துவருவது அதன் பழைய மரபுத் தன்மைக்குக் கிடைத்த வெற்றியே ஆகும்.

இதன் தொடர்வாய் திருக்குறளையும் சித்திக்க வேண்டி உள்ளது. திருக்குறளுக்கு நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக உரைகள் தோன்றி வருகின்றன. இன்னும் சொல்லப் போனால் தமிழாசிரியர் ஒருவர்¢ தன்னைத் தமிழாசிரியராக நிலை நிறுத்திக் கொள்ள வேண்டுமானல் திருக்குறளுக்கு உரை எழுதியே ஆகவேண்டும் என்ற நிலை தற்போது ஏற்ப்டுள்ளது. இதன் மூலம் தி¢ருக்குறள் மிகு பரவலாக்கம் பெற்ற நூல் என்ற பெருமையைப் பெற்று விட்டது. என்றாலும் அதன் மிகு பரவலாக்கம் அதன் முழுமையைக் கூறுபோட்டுவிடும் அளவிற்கு வளர்ந்து வருகிறதோ என்ற கவலையும் ஒருபுறம் ஏற்படுகிறது.

திருக்குறளைப் பரப்பும் பதிவு பெற்ற நிறுவனங்கள், பதிவு பெறாத நிறுவனங்கள், பல்கலைக் கழகம் போன்ற கல்வி நிறுவனங்கள், தனிமனிதர்கள், குழுமனிதர்கள் என்ற அனைத்துக்கும் அனைவருக்கும் தற்போது திருக்குறள் பிரதி தேவை என்ற நிலையிலேயே திருக்குறளின் தேவை அதிகரித்து விட்டது. திருக்குறளின் எளிமை, தேவை கருதி அது பல வெளியீட்டு நிறுவனங்களினால் வெளியிடப் பெற்றுவருகிறது. பனையோலை, தாள், சுவர், பேருந்தின் உள்மேல் பகுதி, திரைப்படத் தொடக்கம், வானொலி தொலைக்காட்சி போன்றவற்றில் இடம் பெறும் நிகழ்ச்சிகள், கணினி மென்பொருட்கள் போன்ற பல தளங்களில் தி¢¢ருக்குறள் பயன்படுத்தப் பெற்று வருகிறது. இதுதவிர திருக்குறள் கவனக நிகழ்ச்சி, திருக்குறள் வகுப்பு, கருத்தரங்கு, முற்றோதல் முதலான சிறப்புச் செயல்பாடுகளும் தமிழகத்தில் நிகழ்ந்து வருகின்றன. தமிழக அரசும் திருக்குறளை முன்னிறுத்துவதில் தனி பங்காற்றி விருதுகளும், பதக்கங்களும் அளித்து வருகிறது. இது தவிர ஆய்வு நிறுவனங்கள் மொழிபெயர்ப்புப் பணி, ஒப்பிடும் பணி முதலியவற்றைச் செய்து வருகின்றன.

இத்தகைய பல தளத் தேவை உடைய திருக்குறள் பிரதிக்குப் பொதுமை அல்லது முழுமை என்பது காப்பாற்றப் பட வேண்டிய ஒன்றாகும். அந்த முழுமை கருதியே தி¢ருக்குறள் தொடர்புடைய அனைவரையும் ஒருங்கிணைக்க முடியும். இந்த ஒருங்கிணைப்பை இதுவரைக் காப்பாற்றி வந்தத் தமிழ்உலகம் தற்போது தி¢ருக்குறளை வெளியிடுவதில் சில மாற்றங்களைக் கண்டுவருகிறது. எழுத்துக்களை தரப்படுத்தி ஒரே நிலைப் படுத்துவது, தமிழ்க் கணினி எழுத்துருக்களைத் தரப்படுத்தி ஒரே நிலைப்படுத்துவது போன்றவற்றில் பல சிக்கல்களைச் சந்தித்து வரும் தமிழ் உலகம் தி¢ருக்குறளையும் நிலைப்படுத்த வேண்டிய சூழலுக்குத் தற்போது தள்ளப் பெற்றுவிட்டது.

திருக்குறளில் இதுவரைப் பாதுகாக்கப் பட்டு வந்த மரபும், வைப்புமுறையும் தற்போது மாற்றப் பெற்று வருகின்றன. அதாவது 1. பால் பகுப்பைப் புறக்கணி¢த்து அதனை பலவாக பிரித்துக் கொள்வது 2¢. அதிகார முறையை மாற்றி வைப்பது, அதிகாரத் தலைப்புகளை மாற்றுவது 3. பத்துக் குறள்கள் என்ற நிலையில் இதுவரை பின்பற்றப் பட்டு வந்த வைப்புமுறையை மாற்றியமைத்தல் முதலான மாற்றங்கள் தற்போது நிகழ்ந்து வருகின்றன. இந்த மாற்றம் தற்போது கட்டுடைத்தல் என்ற நிலையில் புதிய திறனாய்வின் பாற்பட்டது என்று ஒரு புறம் வரவேற்கலாம். என்றாலும் உலக இலக்கியமாகத் திருக்குறள் அறிமுகப் படுத்தப்பட்டபின் இந்த மாற்றங்களால் குழப்பமே நிலவும். மாற்றியமைக்கப் பட்ட முறைமையைக் கொண்டு உலகம் முழுவதும் பல்கிப் பெருகிவிட்ட பிரதிகளில் பொதுமையைக் காணமுடியாது. மாற்றியமைக்கப் பட்டமுறையும் ஒருவழிப்பட்டதாக இல்லாமல் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அடிக்கருத்து அடிப்படையில் மாற்றியமைக்கப் பட்டிருப்பதால் திருக்குறளைச் சார்ந்து உலகம் முழுவதும் நடைபெற்று வரும் பல நிகழ்ச்சிகள் குழப்பத்தில் முடிந்துவிடும்.

சாதாரண மனிதர்க்கும் ஏற்ற வகையிலும், தற்கால நடைமுறை வாழ்க்கைக்கு ஏற்றவகையிலும் திருக்குறளின் வைப்புமுறை மாற்றியமைக்கப் பட வேண்டும் என்ற நிலையிலேயே இம்மாற்றங்களைச் செய்ய விரும்புவதாக மாற்றியமைத்த உரையாசிரியர்கள் கூறுகிறார்கள். அவர்களுள் இருவர்¢ குறிப்பிடத்தக்கவர்கள். அவர்களுள் ஒருவர் திருக்குறள் உரையுடன் தந்த சாலமன் பாப்பையா, மற்றவர் திருவள்ளுவம் தந்த க. ப. அறவாணன்¢.

''தமிழில் எத்தகைய இலக்கியப் பயிற்சியும் இல்லாத சாமானியரும் எக்காலத்திற்கும் பொருந்தும் திருக்குறளைத் தெரிந்து கொள்ளும்படி தரமுயலும் முயற்சி இது. இதன் நோக்கம் தி¢ருக்குறளைச் சிதைப்பது அன்று. அதன் அழகையும் உண்மையையும் இன்றைக்கு அது எல்லார்க்கும் பயன் தரும் பாங்கையும் வெளிப்படுத்துவதே '' ( சாலமன் பாப்பையா (உ. ஆ) தி¢ருக்குறள் உரையுடன் ப17 ) என்பது தி¢ருக்குறளின் முழுவடிவத்தையும் தன் விருப்பத்திற்கு ஏற்றவகையில்¢ மாற்றி அமைத்துக் கொண்ட சாலமன் பாப்பையா அவர்களின் கருத்தாக உள்ளது.

காமத்துப்பாலைத் தவிர்த்து மற்ற பால்களில் முறைமாற்றத்தை ஏற்படுத்தித் திருவள்ளுவம் என்ற நூலைத் தந்துள்ள க. ப. அறவாணன் '' இந்நூலின் நோக்கம் வழக்கமான திருக்குறள் வரிசை முறையைப் போற்றுவதுடன் தி¢ருக்குறளைக் கருத்து (பொருள் conceptual) அடிப்படையில் வழங்குவது ஆகும். திருக்குறளை வாசிக்க விரும்புவோர்க்கும் கருத்து அடிப்படையில் பொருளைத் தேடுவோர்க்கும் மிகவசதியாக இருக்கும் என்பதால் இம் முயற்சி மேற்கொள்ளப் பெற்றது'' (க. ப. அறவாணன். திரூவள்ளுவம்) என்று மாற்றத்திற்கான காரணத்தை வரையறை செய்கிறார்.

முன்னவர் திருக்குறள் வரிசைமுறை, எண்முறை போன்றவற்றை முழுமையையும் மாற்றிவிட பின்னவர் - அறவாணன் வரிசைப்படுத்தியபடி எண், திருக்குறள் பழைய மரபு எண் ஆகிய இரண்டையும் தந்து பழைய மரபு முறைக்கு மதிப்பளித்¢து உரைதந்துள்ளார். மேலும் அறவாணன் ''அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்'' என்ற குறட்பாவில் தொடங்குவதன் மூலம் அறவாணன் வரிசைத் திருக்குறளும் 'அ' என்ற எழுத்தில் இருந்து தொடங்கி விடுகிறது. காமத்துப்பால் மாற்றம் பெறாமையால் 'ன்' என்ற மெய்யெழுத்தில் முடிவு பெற்று விடுகிறது.

ஆனால் இவர்கள் இருவரும் செய்துள்ள திருக்குறளின் பால்பகுப்புமுறைக்கு ஈடான பிரிப்புமுறை அவரவர் கருதுகோளுக்கு ஏற்ப அமைந்துள்ளது. சாலமன் பாப்பையா நூலின் உயிர், குடும்பம், சமுதாயம், அரசியல், நிர்வாகம், பண்பாடு, மெய்ப்பொருள் என்ற ஏழுவகையுள் பிரித்துள்ளார். அறவாணன் அறத்துப்பால் பொருட்பால் ஆகியவற்றில் உள்ள அதிகாரங்களைப் பின்வரும் பிரிவுகளில் அடக்கியுள்ளார். பண்பியல், கல்வியியல், வெற்றியியல், பொருளியல், மென்மையியல், குடும்பவியல், பால் உறவுக் குற்றவியல், கயவர் இயல், சமூகவியல், அரசியல், சான்றோர் இயல், தோழமைஇயல், வீர இயல், மீநம்பிக்கைஇயல், களவியல், கற்பியல் என்ற நிலையில் பிரிக்கப் பெற்றுள்ளது. இவரின் பகுதியில் காமத்துப்பால் மாற்றம் பெறாவிட்டாலும் அதன் முழுப்பகுப்புமுறைக்குக் காமத்துப்பால் என்ற பெயர் இடம் பெறச் செய்யப் படவில்லை.

முன்னவரின் உரைநூல் 1999ல் வெளியிடப் பெற பின்னவரின் நூல் 2006ல் வெளிவந்துள்ளது. ஏறக்குறைய ஏழுஆண்டுகளில் முன்னவரின் பதிப்பு வரிசை ஏற்கப் பெறாமல் பின் ஒருவரால் வேறுவகையில் மாற்றம் பெற்றுவிட்டது. ஏழு ஆண்டுகள் கூட தாங்காத அளவில் அவ்வகைமைப்பாடு இருக்குமானால் அவ்வகைமைப்பாடு வெற்றி பெற்றது எனக் கொள்ளல் தகாது. இதே நிலை பின்னவரின் நூலுக்கும் ஏற்படலாம். எனினும் இவர் திருக்குறள் எனத் தலைப்பை வைத்துக் கொள்ளாமல் திருவள்ளுவம் என் வைத்துக் கொண்ட அளவில் திருக்குறளுக்கு உள்ள மரபு உயிர் காக்கப் பெற்றுவிட்டது எனக் கொள்ளலாம். இன்னும் சில ஆண்டுகளில் ஒவ்வொரு தமிழாசிரியரும் ஒவ்வொரு கருத்தை முன்வைத்து முறைமையை மாற்றலாம். இந்த இருவருக்கான அனுமதி மற்றவர்க்கும் உரியாதாகவே ஏற்றுக் கொள்ளப் பெற்றுவிடும்.

இவ்வகையில் அவரவர் கருத்து அடிப்படையில் திருக்குறளை முறைமை செய்யப் புகுந்தால் இறுதியில் திருக்குறள் இருக்காது. ''கட்டிடத்தின் அடித்தளத்தையே அசைத்துவிட்டு கட்டிடத்தை அழகு படுத்துகிறேன் என்று சொன்னால் எவனும் ஏற்றுக் கொள்ள மாட்டான். ( ச. வே. சுப்பிரமணியம் வள்ளுவம் இதழ் புத்தக மதிப்புரை 06.2000 ப.81)'' என்ற ஆய்வாளரின் கருத்து இதுபோன்று முறைமை மாற்றும் உரையாளர்கக்கு எச்சரிக்கை செய்கிறது.

சொந்த வீட்டை இடித்துக் கட்டலாம். சொந்த நூலை மாற்றிப வைக்கலாம். உரையாசிரியர்கள் இம்முறையில் மூலநூலை மாற்றம் செய்யப் புகுவது சரிதானா என்று ஒரு கேள்வி எழுப்பினால்¢ அதற்கு தொல்காப்பிய நூற்பாக்கள் விடை தருகின்றன '' சொல்லப் பட்டன எல்லா மாண்பும் மறுதலையாயின் மற்றது சிதைவே (தொல் பொருள் 651)'' ''சிதைவில என்ப முதல்வன் கண்ணே ( தொல் பொருள் 652) '' என்ற மரபியல் நூற்பாக்கள் முதல் நூலின் மறுதலைகளை ஏற்பதில்லை என்ற கருத்தைத் தருவன. முதல்நூலைச் சிதைக்கும் வேலைகளில் உரையாசிரியர்கள் இறங்க வேண்டாம்¢ என்ற இந்த பொன்னே போல் போற்றும் முறைமை இக்காலத்திற்குத் தேவை. வழி வழி மரபாக உரையாசிரியர் காத்து வந்த முதல்நூலுக்கான மரபைச் சிதைக்க எவருக்கும் அனுமதி இல்லை. அதிலும் குறிப்பாக உரை எழுதப் புகுபவர் முதன் நூலை மேன்மைப் படுத்த வேண்டுமே தவிர அவர்¢ பதிப்பாசிரியராகச் செயலாற்ற இயலாது. இந்நடைமுறைகளைப் பார்க்கும்போது ''எழுதியவன் ஏட்டைக் கெடுத்தான், படித்தவன் பாட்டைக் கெடுத்தான் '' என்ற பழமொழி எக்காலத்திற்கும் உரியதாக மாறிவிடுகிறது.

அச்சுக்கலை வந்தபின் தமிழ் வளரத்தொடங்கி விட்டது என்றாலும்¢ தற்போது அந்தத்துறையின் அபார வளர்ச்சி தமிழுக்குத் தடையாக அமைகிறதோ என எண்ணத் தோன்றிவிடுகிறது. காரணம் தினம் தினம் புத்தகங்கள் எழுதுபவரின் எண்ணிக்கை கூடிக் கொண்டே போகிறது. புத்தகம் வெளியிடும் நிறுவனங்கள் அதிகரித்துவிட்டன. ஆனால் புத்தகத்தின் தரம் அதன் கருத்து இவற்றில் குறைபாடுகள் பல உள்ளன. நூலாசிரியர்கள் ஒவ்வொருவரும் ஒரு பதிப்பகத்தின் உரிமையாளராக மாறிவிட்டனர். இதன் காரணமாக முன்னர் தமிழ் வெளியீட்டு உலகில் இருந்த தணிக்கை முறை தற்போது இல்லை. அதாவது பழைய காலத்தில் ''பரிசோதிக்கப் பெற்றது'' என்ற நிலையில் மூத்த அறிஞர் ஒருவரின் ஒப்புதல் பெற்று நூல் வெளியிடும் பெறும் முறைமை இருந்தது. இன்னும் பழைய காலத்தில்¢ அரங்கேற்றும் முறை இருந்தது. இதில் ஒரு படைப்பு விவாதிக்கப் பெற்றபின்னரே வழக்கிற்கு வரும்.

இதுபோலவே பதிப்புத்துறையில் தரம் கொண்ட நிறுவனங்கள் இருந்தன. அவை தரப்படுத்தப் பட்ட புத்தகங்களை மட்டுமே வெளியிட்டன. இற்றைக் காலத்தில் நூல் வெளியிடுவதில் இலாபம், பணம், புகழ் முதலியன முக்கியப் பங்கு வகிக்கின்றன. இதன்காரணமாக நூல் தரம் என்பது கேள்விக்குறியாகி வி¢ட்டது.

மேலே திறனாயப் பெற்ற இரண்டு நூல்களும் உரையாசிரியர்களின் சொந்தப் பதிப்பகங்கள் வாயிலாக வெளியிடப்பெற்றவை என்பது இங்குக் கருதத்தக்கது. வெளியிட ஆர்வமும், பொருளும் அமைந்துவிட்டால் அவரவர்¢ நோக்கத்திற்கு புத்தகங்களைச் சந்தைப் பொருளாக்கிவிடலாம். இந்தச் சந்தை மயமாக்கல் மக்களால் ஏற்கப்படுமா என்பது ஐயமே. பல பதிப்புகளைக் கண்ட மரபு வைப்புமுறை கொண்ட திருக்குறள் போல இவை நிலைக்கக்கூடியன அல்லன என்பது அழியா உண்மை.

எனவே காலவெள்ளத்தில் முழுமை பெற்று மரபாக உள்ள நூல்களை அதன் மரபு கெடாமல் குலையாமல், குறைக்காமல் கூட்டாமல் வெளியிடுவது என்பதே நல்லது. ஒரு பக்க மரபுகளை உடைத்தெரிவதில் தவறில்லை. எவ்விதத்திலும் ஊறு செய்யாத நல்ல மரபுகளைக் காப்பாற்றி இன்னும் சில நாட்களுக்காவது வைத்திருக்கவேண்டியது ஒவ்வொரு தமிழரின் கடமை ஆகும்.

இக்கட்டுரை திருக்குறளி¢ன் வைப்புமுறை பற்றிய வேறுபாடுகளை மட்டுமே தொட்டுக் காட்டுகிறது. வைப்புமுறை மாற்றங்கள் நிகழ்த்திய நூல்களின் தரங்கள் குறித்து பெரும் விவாதமே எழ வேண்டும். அப்படி எழும் அந்த விவாதங்கள் இனி வரும் நூல்களின் தரத்தை உறுதி செய்யும். இல்லையாயின் தரமிலா நூல்களை தமிழ் இலக்கிய வரலாறு சுமக்க வேண்டியதாகிவிடும்.

ஞாயிறு, ஜனவரி 07, 2007

முதல் காயம்

வேலைகளின் களைப்பில் எதை முன் செய்வது எதைப் பின் செய்வது என்று தெரியாமல் எப்படியோ எதையோ செய்து கொண்டிருக்கையில்
ஊர்ந்து செல்லும் பொம்மை என் இருவயது மகள் எனக்கும் உதவி செய்யாமல் மனைவிக்கும் உதவி செய்யாமல் தனக்குத் தானே உதவி செய்யாமல்
ஏதோ செய்து கொண்டிருந்தாள் பார்க்காத நேரம் செய்யத் தோணாத வேலைகளை அவள் செய்வாள்
காரட் சீவிய பாதி வேலையில் அரிசி கொதிப்பை அடக்க மனைவி செல்ல
மகள் சீவத் தொடங்கினாள் கையின் தோல் மெல்லச் சிதைபட்டு சிவப்பு ரத்தச் சுவர் தெரிந்தது அடுத்த நொடி வலியின் அழுகை
ஓடி வந்து பார்த்து பல சொல்லி அவள் அழுகை அடங்கவில்லை
அது அவளின் முதல் காயம்
கைகளைக் காட்டி காட்டி அழுதழுது முகம் சிவந்து
அழுகை வற்றிய நேரங்களில் அந்த காயத்தை தொட்டுத் தொட்டு வலியை மேலும் வலியதாக்கிக் கொண்டாள்
என்ன செய்வது மனைவி பெரிய துணியெடுத்துச் சிறிய கட்டு போட்டாள்
கட்டு உடனே நாள் முழுவதும் நடந்தாள் வலிக்க வேண்டும் என்று துணியைக் காயத்தை அழுத்தினாள் ஆனால் துணிப்பந்து வலி தரவில்லை மாறாக மென்மை தந்தது மேலும்¢ அழுத்தி மென்மையை மகள் பெற்றாள் அமைதி எங்களுக்கு
ஆனால் நாள் முழுவதும் அவள் கை தூக்கி அவள் நடந்த காட்சி
முதல் காயத்தின் முதல் வலி உணரப்பட்டது
இன்னமும் அந்த விரலில் வலி உணர்கிறாள் மகள்

வெள்ளி, ஜனவரி 05, 2007

.technorati.com

Technorati Profile

திருவருட்பயன் - பெண்ணிய வாசிப்பு

தமிழரின் தத்துவக்கொடைகளுள் முதன்மை வாய்ந்தது சைவசித்தாந்தம் ஆகும். இலக்கியம் தோன்றியபின் இலக்கணம் வகுத்த மரபைப்போல தோத்திர நூல்களான திருமுறைகளுக்குப்பின், சாத்திர நூல்களான சித்தாந்த நூல்கள் தோற்றம் பெற்றன. திருமுறைகளில் முதன்மை பெறும் சம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வரைப்போல மெய்கண்டார், அருள்நந்தி சிவம், மறைஞான சம்பந்தசிவம், உமாபதி சிவம் ஆகிய நால்வர் புறச்சந்தான ஆச்சாரியர்கள் எனப் போற்றப் பெறுகின்றனர். இவர்கள் குருபரம்பரையினர் ஆவர். மெய்க்குருவின் துணையுடன், பதியைப் பசு அடையும் நிலையே முக்தி என்பதால் குருபரம்பரையினர் தத்துவ உலகில் இன்றியமையாதவராகின்றனர்.

உமாபதி சிவம் - சித்தாந்த சாத்திரங்களில் செம்பாதிக்கு மேல் ஆக்கியவர் ஆவர். இவரது திருவருட்பயன் குறள் வெண்பாக்களால் ஆனது; பத்து அதிகாரங்களைக் கொண்டது. ஒரு அதிகாரத்திற்கு பத்துக் குறட்பாக்கள் வீதம் நூறு குறட்பாக்கள் இந்நூலுள் உள்ளன. திருக்குறளின் அமைப்பையும், சொற்செறிவினையும் இந்நூல் பெற்றள்ளது. இந்நூல் பதி, பசு பாசம் ஆகியவற்றின் இயல்பை தௌ¤வாகத் தருகின்றது.

பசு- என்பது உயிர் - இதன் இயல்பபை இந்நூல் ,
சத்து அசத்தைச் சாராது அசத்து அறியாது அங்கண்இவை
உய்த்தல் சதசத்தாம் உயிர்(17)

என்று தத்துவமாக விளக்குகிறது. சத்து என்பது நிலையான பொருள். இறைவனே நிலையான பொருள். அசத்து என்பது உயிர் தவிர்ந்த உலகப் பொருள்கள். அவை நிலையில்லாதவை. சத்தான இறைவனோடும், அசத்தான உலகப்பொருள்களோடும் உயிர் தொடர்புடையது ஆதலின் அதனை சதசத்து என்று தத்துவ உலகில் அழைப்பர்.

உயிருள் பிரிப்பில்லை,; பேதமில்லை,; வகையில்லை,; எனவே எல்லா உயிரும் ஒன்றெனவே,; நிலையெனவே கொள்ளுகின்றது சித்தாந்தம்.

அவன் அவள் அது எனும் அவை மூவினனமையின்
தோற்றிய திதியே ஒடுங்கிய மலத்து உளதாம்
அந்தம் ஆதி என்மனார் புலவர் (நூற்பா1 சிவஞானபேதம்)

அவன் அவள் அது என்ற முப்பகுப்புடையது உலகம் என்ற மேற்காணும் சிவஞானபோத நூற்பாவின்படி, உலகப்பொருள்களில் சதசத்தான அவனும் அவளும், அசத்தான அதுவும் சேர்ந்தது உலகம் அமைந்துள்ளது. சதசத்தான ஆணும், பெண்ணும் உடலளவில் பிறிந்திருப்பினும் அவை உயிரால் ஒன்றே என்பது சித்தாந்த அடிப்படைக்கருத்தாகும்.

உயிரால் ஒன்றுபடும் ஆண், பெண் இருபாலரும் சித்தாந்த வழியில் நன்றாய் முக்திபெற முடியும் என்பது சிந்தாந்தத் தௌ¤வு. இவ்வழியில் ஆணுக்கு ஈடான சரிசமநிலையை, ஏற்றத்தாழ்வற்ற நிலையைப் பெண்ணும் பெற இயலும் என்ற தத்துவத் தௌ¤வு பெண்ணியவதாத்தால்- பாராட்டப்பெறக் கூடியதே.

இருப்பினும் திருவருட்பயனில் இடம்பெறும் சிலகருத்துக்கள் பெண்களுக்கு எதிரானதாக இருப்பதை கற்கையில் உணர முடிகின்றது. அவற்றைப் பெண்ணியப் பார்வையில் ஆராய்வதாக இக்கட்டுரை அமைகின்றது. தெய்வப்பனுவலாகவும், விமர்சனத்திற்கு அப்பாற்பட்டதாகவும் திருவருட்பயனை கருதுவோர்க்கு இக்கட்டுரை எவ்வித மறுப்பையும், இடையூற்றையும் ஏற்படுத்தாது என்பதை இங்கு தௌ¤வுபடுத்திக் கொள்வது நல்லது.

பெண்ணிய வாசிப்பின் போது மிகவும் விமர்சனத்திற்கு உள்ளாகும் ஒரு குறட்பா பின்வருவதாகும்.

பலரைப் புணர்ந்தும் இருள் பாவைக்கு உண்டு என்றும்
கணவற்கும் தோன்றாத கற்பு (25)

என்ற குறட்பா இருள் மலநிலையை உணர்த்த வந்ததாகும். இருள் மலம் எனப்படுவது ஆணவமலமாகும். இதுவே மூலமலம் ஆகும். இவ்வாணவம் உயிரில் படிந்து ஆண்டவனை அடைய விடாது தடுக்கின்றது. இது என்றைக்கு உயிர் தோன்றியதோ அன்றைக்கே உடன் தோன்றியதாகும். அதனால் இதனை சகசமலம் என்பர் தத்துவ உலகினர். உயிர்கள் பல,; ஆணவமலம் ஒன்றே. உயிர்கள் பல; ஆண்டவன் ஒருவனே என்ற இவ்விளக்கங்கள் ஆணவமலத்தைத் தௌ¤வுபடுத்தும்.

மேற்குறட்பா பலவழிகளில் பொருள் உணரத்தக்கது. அதன் நேர்பொருள் பின்வருமாறு,;

இல்லறத்தில் உள்ள பெண் ஒருத்தி, தன் கணவன் இல்லாத பொழுதுகளில் பிற ஆடவருடன் கூடி இன்பம் பெறும் இயல்பினள். அவள் தன் கணவன் வந்த காலத்து அவனுக்கே அன்புடையவள் போல, கற்பு காப்பாள். அத்தகைய இயல்புடையது இருள்மலம். இதில் பயின்று வரும் உவமையைப் பின்வருமாறு விரிக்கலாம்.

இருள்பாவை
தெரிந்தபொருள்- ஆடவர் பலருடன் கூடும் பாவை
தெரியாத பொருள்- பல உயிருடன் உள்ள இருள் (ஆணவமலம்)
பொதுதன்மை - பலருடன் கூடுதல்.

இதன் மூலம் பின்வரும் கேள்விகள் எழுகின்றன.

1) கற்புடைய பெண் யார்? அவளின் இயல்புகள் என்ன?
2) போலிக் கற்புடைய பெண்யார்? அவளின் இயல்புகள் என்ன?
3) கற்புடைய பெண் போல கணவனிடம் நடந்துகொள்வது என்பது பெண்ணின் இயல்பா?
4) பலரைக் கூடுதல் பெண்ணுக்கு இயல்பானதா?
5) மணமின்றி பலரைக்கூடும் பொருட்பெண், கற்புடைய பெண் இவர்களுக்குள் வேறுபாடு இல்லையா-?
6) ஆணவத்திற்கு உவமையாக பெண் கூறப்படுவதால் அவளே ஆணவத்தின் வடிவமா?
7) ஆன்மா ஆண்மயமானதா?
8) கணவன் என்பவன் கடவுளுடன் உவமை வாயிலாக ஒப்ப எண்ணப் படுகிறானா?
9) பெண் என்பவள் கடவுளுக்கு உண்மையான ஆன்மாவாக அமைய இயலாதா?

போன்ற பல கேள்விகளுக்கு மேற்குறள் இடமளிக்கிறது. இக்கேள்விகள் கேள்விகளாகவே அமையட்டும். இவற்றுக்குப் பதிலளிக்கப் புகுந்தால் அவ்விடைகள் மேலும் பல சிக்கல்களைச் சிடுக்குகளை உண்டாக்கும். எனவே பதில் பெறாமல் கட்டுரை மேலே செல்கிறது.

இருளின் இயல்பைக் கூறவந்த திருவருட்பயனின் ஆசிரியர், உவமை ஒன்றைக் கூறியதன் வாயிலாக சைவ சித்தாந்தத் தத்துவத்தை ஆண்அதிகாரப்பட்டதாகக் கண்டுள்ளார் என்பது மேற்செய்திகள் மூலம் தௌpவாகின்றது. இது நிற்க.

திருமுறைகளிலும், திவ்யபிரபந்தங்களிலும் பெண் படைப்பாளர்களைக் காணும் பொழுது சந்தானாச்சாரியர்களுள் பெண்பாலர் இடம்பெறாததும் இங்கு கவனிக்கத்தக்கது.
மேலும் குருவின் இயல்பைக் கூறும் அருளுருநிலையிலும் ஆண் பால் தன்மைகளே சுட்டப்பெற்றிருப்பது- பெண்பாலர் ஞானாசிரியாக மாறஇயலது என்ற கருத்தைத் தருவதாக உளது.

கோ(41) அவனை (46), பெய்ப்பாவகன் (47), பேர் அறிவான்(49) இவன் (50) ௲ஞானாசிரியரின் தன்மைக்கு உணர்த்தப்பெற்ற இவ்வாண்பால் பெயர்கள் ஞானாசிரியராக ஆண்பாலரே வரஇயலும் என்பதைக் கூறாமல் கூறுகின்றன. மேலும் அணைந்தோர் தன்மை என்ற நிறைவு இயலிலும் ஆண்பால் பெயர்களே பயனாகியுள்ளன. அணைந்தோர் தன்மை என்பது அடியார் தன்மையைக் குறிப்பதாகும்.

எனவே ஞானசிரியரனாகவும் அமையமுடியாமல், மலமற்ற உயிராகவும் அமைய முடியாமல், அணைந்தோருள் ஒருவராகவும் நிற்கமுடியாமல் பெண் தவிர்க்கப் பெற்றுள்ளமை மேற்கண்டதன் மூலம் உறுதியாகின்றது.

ஆண்-பெண் இன்பம்
ஆண் இணைவாலே பெண் இன்பம் பெற இயலும் என்ற மரபு அடிப்படையிலான கருத்து மற்றொரு குறளில் உவமையாக்கப் பெற்றுள்ளது.

இருவர் மடந்தையருக்கு என் பயன் இன்பு உண்டாம்
ஒருவன் ஒருத்தி உறின்(72)

என்ற இக்குறளில் ஒருவனும் ஒருத்தியும் காணும் இன்பமே இன்பம்; இருபெண்கள் இணைவால் இன்பம் பெற இயலாது; இதுபோல உயிர் எனும் பெண் ஆண்டவன் எனும் ஆணுடன் கலந்தால் மட்டுமே இன்பம் பெற இயலும் என்ற பொருள் விளக்கப்படுகிறது.

இங்கு ஆண் ஆண்டவனாகவும் பெண் உயிராகவும் ஏற்ற இறக்கத்துடன் காட்டப்பெற்று பெண் இரண்டாம் நிலையில் வைக்கப்பெற்றுள்ளாள். மேலும் ஆன்மாவும் ஆன்மாவும் இணைந்து இன்பம் பெற இயலாது என்பது தத்துவ அடிப்படையில் சரியானாலும், பெண்ணும் பெண்ணும் இணைந்தால் இன்பம் காண இயலாது என்பது தற்கால நிலையில் சரியாகாது. பெண்ணும், பெண்ணும் இணைந்து இன்பம் பெறலாம்,; அதுவே பெண்ணிற்கு முழு உணர்வையும், மதிப்பையும் அளிப்பது என்பது தற்கால பெண்ணியலார் கருத்து. இவ்வடிப்படையில் காணுகையில் பெண்ணை ஆன்மாவாகவும், ஆணை ஆண்டவனாகவும் உவமையுள் கலந்திருப்பது தேவையற்றதாகின்றது.

எனவே ஆண்படைப்பாளர்கள் இலக்கியம், இலக்கணம், தத்துவம் என எது செய்ய புகினும் தமக்குச் சார்பாகவே படைப்புக்களை ஆக்கிக்கொண்டுள்ளனர்,; பெண்களுக்கு எதிராகவே இருந்துள்ளனர் என்பது இதன்மூலம் மேலும் வலுப்பெறுகின்றது.